அறிவுரைக்கோவை
93
பாடியிருக்கும் புராணகதைகளை யெல்லாம் நாம் அப்படியே தழுவ வேண்டுமென்பது கட்டாயமாகாது. ஏனென்றால், அப்பனை வணங்கும் நமது சைவசமயமும், அம்மையை வணங்கும் வைணவ சமயமும் இக்கதைகளைச் சார்ந்து பிழைப்பன அல்ல. இக் கதைகளின் உதவி வேண்டாமலே இவ்விரு சமயங்களும், மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய அரிய பெரிய மெய்ப்பொருள்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், நம்முடைய சமயங்களின் உண்மைகளைச் 'சிவஞான போதம்' சிவஞான சித்தியார்' என்னும் உயர்ந்த அறிவு நூல்களில் விளக்கப்பட்டபடி இளம்பருவ முதற்கொண்டே நம்முடைய மக்களுக்குக் கற்பித்துவர ஏற்பாடு செய்தல் ய வேண்டும்.
இச்சமய உண்மைகளுள் எதனையுங் குருட்டுத் தனமாய் நம்பும் தீய பழக்கத்தை ஒழித்து எதனையும் தம் மறிவால் ஆராய்ந்து பார்க்கவும் தம் மறிவுக்கு விளங்காதவைகளை அறிந்தோர்பாற் கேட்டுத் தெளியவும் அவான
உண்டாக்குதல் வேண்டும்.
சிவபிரான் திருக்கோயில்களில் நிறுத்தப்பட்டிருக்கும் சிவலிங்க வடிவானது ஒளிவடிவாய் விளங்கும் இறைவனது நிலையை உணர்த்துவதாகும். இவ்வடிவு எல்லாச் சமயத்தா ராலும் வழுத்தி வழிபடுதற்குரிய பொதுவான அடையாள மாய் உலகம் எங்கும் உள்ளதாகும். எந்தச் சமயத்தாரேனும் எந்தச் சாதியாரேனும் இதனை வணங்குவதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின், அவர்களைத் தல டசெய்யாமல், வந்து வணங்குவதற்கு இடங் கொடுத்தல் வேண்டும்.
L
“என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர்”.
6
என்னும் தாயுமான அடிகளின் திருமொழியை நம்மவர்கள் எப்போதும் நினைவில் வைத்தல் வேண்டும். ஆனாற் கோயிலுள் வருபவர்கள் எல்லோரும் குளித்து முழுகித் துப்புரவான ஆடை உடுத்து அடக்க வொடுக்கமாய் வாய் பேசாது உட்சென்று வணங்கும்படி செய்தல் வேண்டும்.