281
இராசமாணிக்கனார் பார்வையில்
(1876-1950)
LD 600 MLD 600 60W 1. கல்விப் பயிற்சி
முன்னுரை
தமிழ்நாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் போலவே பெரும்புலவராக வாழ்ந்த சிலருள் மறைமலை அடிகள் ஒருவராவர். அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மூன்று மொழிகளிலும் வல்லவர்; சைவத்திலும் தமிழிலும் சிறந்த ஆராய்ச்சி பெற்றவர்; பல ஆராய்ச்சி நூல்கள் எழுதியவர்; அவை அனைத்தையயும் கூடுமான வரை பிறமொழி கலவாத தமிழ் நடையிலேயே எழுதி வெளியிட்டவர்; ஐயரவர்கள் வெளியிட்ட பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களுக்குப் பொருத்தமான பொருள் கூறக் கூடியவர்; அரிய ஆராய்ச்சி நூல்கள் வரைந்தவர். அவருடைய செய்யுள் நூல் சங்கப் புலவராகிய நக்கீரனார் இயற்றிய திருமுருகாற்றுப் படையை ஒத்திருக்கின்றது எனின், அவரது பெருமையை என்னென்பது! சுருங்கக் கூறின், மறைமலை யடிகள் சிறந்த புலவர்; சிறந்த பேச்சாளர்; அரிய ஆராய்ச்சி யாளர்; மிக உயர்ந்த தமிழ்-ஆங்கில இதழாசிரியர்; செய்யுள் இயற்றுவதிலும் வல்லவர்; செய்யுள்களுக்கு உரை வகுப்பதிலும் இணையற்றவர். அவரைப் போல இப்பண்பு களனைத்தும் ஒருங்கே பெற்ற பெருந்தமிழ்ப் புலவரைத் தமிழகம் கண்டதில்லை என்று அறிஞர் கூறுவர். இத்தகைய