76
❖ 20* மறைமலையம் – 20
குறித்தது; திருஞானசம்பந்தப் பெருமான் முதலியோர் அடியார் பெருமக்களை “ஏழையடியார்கள்” (திருவைகாவூர்த் தேவாரம், 1) என்று அருளிச்செய்ததும் அது. வறியேமென்னுந் தன்மைப் பன்மை, தன்னினமான ஏனையோரையுந் தழுவி நின்றது. இது போல்வனவற்றை “உளப்பாட்டுத்தன்மை" (தொல்காப்பியம், வினையியல் 5) யென்பர் சேனாவரையர்; “தனக்கு ஒருமையல்ல தின்மையிற்றன்மைப் பன்மையாவது தன்னொடு பிறரை உளப்படுத்ததேயாம்” என்று அவரதற்கு ஏது உரைத்தலும் ஆண்டுக்காண்க.
எதிர்தல், எதிர்வரல்; ஆவது எதிர்தோன்றல்.
வறியே
‘தவத்தான் முற்றிய பெரியர்க்கும் அரியனாய முருகன் மிடும்பையைப் பொறிபடுத்தெதிரும் பெரியனாயிருத்தலின், அவனை வழிபாடியற்றி இன்புறலறியாது புன்பொருள் கவர்கின்றனையே நெஞ்சே' யென்று இரங்கிக் கூறினாரென்று கொள்க.
றைப்ப துளிப்ப; 'உறைப்பவென்றதனைத் துளிப்ப வென்று ஆசிரியர் நச்சினார்க்கினியரும் பெரும்பாணாற்றுப் படை (379) யுரையில் உரைப்பர். u
'புன்பொருள் சிறுமையையுடைய ய
சிற்றின்பப்
பொருள்கள். அவை ‘மண்டிரிவாகக் கண்டன சிலவு' மென்பது முதலாக மேலே கூறப்படும் பொருள்களென்க.
‘கவரு' மென்றார், பிறரறியாமற் கொள்ளுதலின்; இனி ‘விரும்பு' மென்றுரைத்தலுமாம்.
6
எந்நேரமும் எதனையேனும் நெஞ்சம் சடுதியிற் சடுதியில் மாறி L மாறி
மனனை
நினைத்துக்கொண்டிருத்தலின், 'மின்புரைமனன் என்றார். ஈது தொழிலுவமம். மனன், ஈற்றுப்போலி; ஏ, விளியுருபு.
'ஒற்றிமாநகர் முதல்வன் திருவுரு எழுவித்து வழிபாடியற்றி யின்புற லறியாது புன்பொருள் கவரு மனனே' யென்க.
(66-76) வரம்பு அறும் ஆற்றல் நிரம்பிய முருகன் - அளவு இல்லாத அறிவாற்றல் நிரம்பப் பொருந்திய முருகப் பெருமான், தான் எழுந்தருளும் வான்குடில் ஆக நின்னைத் தந்தனன் ஆக - தான் வீற்றிருந்தருளுந் தூய சிறு வீடாக நின்னை எனக்குக்
-