―
தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்
157
இன்னும், இந்நூலின் உரைநடைச் சுவையை முன்னையிலும் மிகுதிப்படுத்தல் வேண்டிப், பலப்பல சொற்றிருத்தங்களும் சொற் றொடர்த் திருத்தங்களும் ஆங்காங்குச் செய்திருக்கின்றேம்.
இவையல்லாமலும், முற்பதிப்புக்களில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங் களைந்தெடுத்து, வ்வுரைநடையைச் சாலவுந் தூய தனித் தமிழாக்கியிருக்
கின்றேம்.
இங்ஙனமாக உரைநடை வகையிலும் உரைக் குறிப்பு வகையிலுஞ் செய்யப்பட்ட சில பல மாறுதல்களைத் தவிரப் பொருள் வகையில் ஏதொரு மாறுதலும் இதன்கட் செய்யப்பட வில்லை. ஆகவே, முற்பதிப்புக்களைப் பயின்றவர்கள் இப் பதிப்பின்கண் திகைப்புறத்தக்க பொருள் மாறுதல் ஏதுஞ் செய்யப்படவில்லை யென்பதும், இந்நூலின் தமிழ்ச் சுவையினை மேலும் மிகுதி செய்தற்கு வேண்டிய அளவே சில பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன வென்பதும் அறிஞர்கள் அறிவார்களாக! இந் நூலின் முற்பதிப்பினைப் பயின்று மகிழ்ந்தவர்களுக்கு இப் பதிப்பு அம் மகிழ்ச்சியினை மிகுதி செய்யுமென்னும் நம்பிக்கையுமுடையேம்.
பல்லாவரம் பொதுநிலைக் கழகம் திருவள்ளுவர் யாண்டு, 1961
இங்ஙனம்
மறைமலையடிகள்