198
மறைமலையம் - 26
குறிப்புகளைத் தம்வய மின்றியே மொழிந்துவிடுமாறு நேர்வித்த சிவபிரான்றிருவருட்கு எங்ஙனம் நன்றி பகரவல்லேம்! அடிகளின் வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகந்
திருக்கோவையாரிற் காணப்படுங் குறிப்புகளுடன் வைத்து ஒத்து நோக்கி அவைதம்மை எழுதியிருந்தனராயின், புராண காரர்கள் அங்ஙனந் தம்முள் மாறுகொண்டுரையார், புராணகாரருரைகளில் மாறுகோள் கண்டவழியும், அவற்றுட் காணப்படாத குறிப்புகளை ஆராய்ந்துகண்டு எழுது கின்றுழியுந், திருவாசகந் திருக்கோவையாரின் இடை மிளிரும் வரலாற்றுக் குறிப்புகளே அடிகளின் வரலாற்றுண்மையினைத் துணிதற்குக் கருவிகளாயின. இவ்வாறாக ஓர் ஆசிரியரின் உண்மை நிலையைத் துணிதற்கு அவரியற்றிய நூல்களிலுள்ள சொற்பொருட்குறிப்புகளையே பெருந்துணையாய்க் கொள்ளும் ஆராய்ச்சிமுறை இந் நூன்முழுதும் ஊடுருவி நிற்றல் கண்டுகொள்க. அடிகளின் வரலாறு கிளக்கும் பகுதியில் இம்முறை மிக்கு நிற்றல் தெற்றெனப் புலனாம்.
ம்
இனி, அடிகளிருந்த காலமும் அக் காலநிலையும் உண்மையாக விளங்கினாலன்றி, அவரது வரலாற்றி னுண்மையும், அவர் அருளிச்செய்த நூல்களின் உண்மை யும், அவற்றின் வாயிலாக அறியவேண்டி நிற்கும் முற் கால பிற்கால நூல்களின் உண்மையும், சைவம் வைணவம் பௌத்தம் சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களிற் காலங்கடோறும் புகுந்த புராண கதைகளின் உண்மையும், அவ்வக்
க
காலங்
களில் தமிழ்மொழி தனித்தமிழுங் கலப்புத்தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் நின்ற அரசியல் களின் உண்மையும் அவ்வக் காலங்களில் திரிபெய்திவந்த ஒழுக்கங்களின் உண்மையும் பிறவும் உள்வாறறிதல் இயலாது நூல்களின் காலவரையறை தெரியாதவரையிற், பழையது புதியதாகவும் புதியது பழையதாகவும், மெய் பொய்யாகவும் பொய் மெய்யாகவும், முன்னிருந்த ஆசிரியர் பின்னிருந்த வராகவும் பின்னிருந்தவர் முன்னிருந்தவராகவும் கொள்ளப் பட்டு உண்மை சிறிதும் விளங்காமற் பெரியதொரு தலைதடு மாற்றமே தலைவிரித்தாடும். இத் தலைதடுமாற்றப் பேயாற்