* சைவ சித்தாந்த ஞான போதம்
263
புலனாகாமல் அவர்க்குமட்டும் புலனான தன்மையையுற்று நோக்குங்கால்,அவர் கண்ட இறைவனு ருவம்அறிவுருவமே யல்லாது ஊனுருவம் அன்றென்பதூஉம் அவரதனைக்
கண்டதுந் தமது அறிவுக்கண் கொண்டேயல்லாது ஊனக்கண் காண்டன் றென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும், இறைவனுருவம் பெற்றியதாதல்
அருணந்திசிவனார்,
66
'மாயை தான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும் ஆயஆ ணவம் அகன்ற அறிவொடு தொழிலை யார்க்கும் நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால்
என்றும்,
“சத்திதன் வடிவேதென்னில் தடையிலா ஞானமாகும்'
கண்ட
என்றும் அருளிச் செய்வாராயினர். ஆகவே, இறைவனது பேரறிவு நிலையை யுணர்வாராகிய மக்களின் சிற்றறிவு க் கண்ணுக்கே அவன் அருவமாகப் புலனாகாது நிற்பன்; மற்று, அவன் அருளைச் சார்ந்து, அதனால் மாசு தீர்ந்து தூயரான அன்பரின் தூய அறிவுக்கு, அவன்றன் தூய அறிவுருவநிலை முற்றும் புலனானவாறேயாய் விளங்கா நிற்குமென்று
உணர்ந்துகொள்ளல் வேண்டும்.
இனி, “மெய்ப்பொருளாஞ் சிவம் ஒன்றே” என்றது, மேற்காட்டியவாற்றான் மாறுந் தகையவான பொருள்களும்
உயிர்களும்,மாறா நிலையினதான சிவத்தை நோக்க
மெய்யல்லாதனவாதல் பெறப்படுதலாற், சிவம் ஒன்றே மெய்ப் பொருளாதல் தெருட்டியவாறு, அற்றேற் சிவமல்லாத பொருள்களெல்லாம் பொய்யென முடிந்து ஏகான்மவாத மாம் பிறவெனின்; அங்ஙனமன்று, நிலை மாறாததே மெய்யென்றும், நிலைமாறுவதே பொய்யென்றும் உலக வழக்கானுஞ்
சான்றோர் நூல் வழக்கானும் நன்கறியக் கிடத்தலின், என்றுமில்லாத வெறும் பாழையும் பொய் யையும் ஒன்றென்றல் அடாது. நில்லாதவற்றை நிலையின வென்றுணரும், புல்லறிவு" என்னுந் திருக்குறளும் இக் க் கருத்தே பற்றி