பக்கம்:மறைமலையம் 3.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106

❖ மறைமலையம் - 3 ❖

புறஞ்சென்று அனுபவித்த அனுபவங்களின் நினைவுகளே என்றும் நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். இங்ஙனம் யான் கண்ட மிக அரிய அனுபவங்களில் பின்வருவது ஒன்று:”

ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குமுன் யான் நியூஸீலண்டு என்னும் ஊரில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த பொழுது ஆவிவடிவில் நிற்கும் மாந்தர் பலரோடு பொருந்தப் பெறுவேனாயினேன். தெளிவான உள்ள நிலைமை யுடையேனாய், இந் நிலவுலகத்தை அடுத்துள்ள மண்டலத்தைக் கடந்து இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்லவேண்டு மென்னும் கடைசியான நினைவோடு யான் உறங்கச் சென்றேன். யான் எனதுடம்பை விட்டுப் புறப்பட்டதும் எனதுணர்வு துரிதப்படுதலை உணர்ந்தேன்; அத்ததைகயதான சூக்கும ஆன்ம உணர்ச்சியை இதற்குமுன் யான் என்றும் கண்டறியேன். உயர்ந்ததோர் உலகத்தின்கண் உள்ள ஓர் அனுபவத்தைப் பெறப் போகின்றேன் என்பது எனக்கு உறுதியாய்த் தோன்றிற்று; பின் சொல்லப் படுவது உண்மையாக நிகழ்ந்ததாகும்.

ஆவியிருவிலுள்ள மக்கள் பலரைக் கண்டேன்; என்னைச் சுற்றி ஒரு வட்டமாய் அவர்கள் உட்கார்ந்தார்கள்; அவ்வாகாயத்தின் ஊடே நாங்கள் மிதந்து செல்வதுபோற் றோன்றியது; அங்ஙனம் அசைந்து செல்வதைத் தெளிய உணர்ந்தேன்; அங்குள்ளவற்றின் நிலைமை மிகவுந் தூயதாயும் தெய்வத்தன்மை யுடையதாயும் இருந்தது; எனக்குப் புதியதோர் அறிவும் ஆற்றலும் வருவதாகவும், மிகவும் தெளிவான பார்வை கொடுக்கப் படுவதாகவும் காணப்பட்டது. அதன்பிறகு உற்றுக் கேட்பது போல் நின்றுகொண்டிருந்த ஓர் ஆயிரம்பேரை நன்றாய்ப் பார்த்தேன்; ஆனால், சிறிது நேரம் வேறொருவரையும் யான் காணக்கூடவில்லை. எனது பார்வை வரவரப் பெரிதானவுடன், ஒரு பீடத்தின் மேல் மிகவும் வயது முதிர்ந்த அழகிய ஆண்மகன் ஒருவர் நிற்கவும், கிளர்ஒளிவட்டம் ஒன்று அவரது தலையைச் சூழ்ந்திருக்கவும் பார்த்தேன். அவர் வெண்மையான நீண்ட நிலையங்கி ஒன்று உடுத்தியிருந்தார்; அவர் அங்கே குழுமியிருந்த மாந்தரை நோக்கிப் பேசுதலைத் தெளிவாய்க் கேட்டேன். அங்குள்ளவர்களோடு யான் மிகுதியாய்ப் பழகியபிறகு, இந்த ஆசிரியர் இவ்வாண் பெண் மக்களுக்கு ஆன்ம தத்துவ உணர்ச்சியை எழுப்ப முயன்று கொண்டிருந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/139&oldid=1623831" இலிருந்து மீள்விக்கப்பட்டது