இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖ |
அமைந்திருக்கிற தென்னும் உரை அறிவுக்கும் அனுபவத்திற்கும் பொருந்திய தாயில்லை. மேலும், மக்களுடம்பு நிலைபெற முடியாத கொழுந்து விட்டெரியும் தீ நடுவில் ஏதும் வருத்த மின்றி யிருக்கும் சில பிராணிகளை இஞ்ஞான்றை உயிர்நூல்* (Biology) வல்லார் தெரிந்தெடுத்துரைக்கக் காண்டலால், அழல் மயமான ஞாயிற்று மண்டிலத்திலும் ஒளிமயமான உடம்புகளில் உறையும் உயிர்கள் உண்டென்பது இனிது பெறப்படும். இங்ஙனம் ஒளிமயமான நுண்ணியவுடம்புகளில் உறையும் உயிர்களையே தேவர்கள் என்று இங்குள்ளோர் வழங்கி வருகின்றனர். ‘தேவன்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ‘ஒளிவடிவினன்’ என்பதேயாம். அதுகிடக்க.