பக்கம்:மறைமலையம் 3.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
141

கறைகறையாகத் தோன்றுகின்றன. இன்னும் இதிற் பாலை நிலங்கள் பல இம் மண்ணுலகத்தில் இருப்பன போல் இருக்கின்றன. இவ்வுலகத்தில் ஆங்காங்கு எரிமலைகள் இருத்தல்போலத் திங்கள் மண்டிலத்திலும் பெரிய பெரிய எரிமலைகளும், எரிமலை வாய்களும் காணப்படுகின்றன. இவையே யன்றிப் பெரும்பள்ளத்தாக்குகளும், மலைப்பிளப்புகளும், மலையருவிகளும்கூட அதிற் றென்படுகின்றன. பெரிய எரிமலை வாய்களிலிருந்து வெள்ளிக்கம்பி போன்ற ஒளி வடிவங்கள் கிளம்பி நெடுந்தூரம் செல்லுகின்றன; ஆனாலும் இவற்றின் உண்மை இன்னதென்று விளங்கவில்லை. பச்சை நிறமான கடல்களுங்கூட அங்கிருக்கின்றன. உயிர்கள் உயிர் வாழ்தற்கு வேண்டும் வெப்பமும் அங்குள்ளதாகத் தெரிந்துரைக் கப்படுதலால்* (சந்திர மண்டிலத்திற்கு 1971இல் சென்றுவந்த அமெரிக்க விண்வெளி அறிஞர்கள் அங்கு உயிர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்) சந்திர மண்டிலத்திலும் உயிர்கள் உண்டென்பது உய்த்துணரப்படுவதாகும். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/174&oldid=1624593" இலிருந்து மீள்விக்கப்பட்டது