பக்கம்:மறைமலையம் 3.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
147

ஐந்துமணி நேரமுமே யுள்ளதென்று அறியப் படும்; ஐந்துமணி நேரமுள்ள அவிராக்காலமும் அடுத்தடுத்து ஐந்து சந்திர மண்டிலங்களினால் விளக்கப் படுதலின் வியாழ மண்டிலம் என்றும் ஒளியுடையதாகவே விளங்குமென்பது பெறப்படும்.இனி, இது ஞாயிற்று மண்டிலத்தைச் சுற்றி வருவதற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் செல்லுதலின், நமக்குப் பன்னிரண்டு ஆண்டு கொண்ட ஒரு கால அளவை வியாழ மண்டிலத் துள்ளார்க்கு ஓர் ஆண்டு ஆகுமென்பது அறியற் பாலதாம். இது கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/180&oldid=1624600" இலிருந்து மீள்விக்கப்பட்டது