பக்கம்:மறைமலையம் 3.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
157

அங்ஙனம் அவர்கள் விளக்கிக் காட்டும் முடிபுகளெல்லாம் நமதாராய்ச்சிக்கு அகப்பட்ட அவ்வுலகங்களில் ஆறறிவுயிர்களும் மற்ற ஒன்று முதல் ஐயறிவு ஈறாக உடைய உயிர்களும் இருத்தற்கேற்ற பொருள்களும் அமைப்புகளும் வாய்ந்துள்ளன வென்றும், அதனால் அவ்வுயிர்கள் அவற்றின்கண் வாழ்தல் திண்ணமே யாமென்றும் நாட்டுகின்றன. இன்னும் அவ்வுலகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் ஈண்டு விரித்துரைக்கப் புகுந்தால் இது வரம்பின்றிப் பெருகுமாதலால் இவற்றை இவ்வளவோடு நிறுத்துகின்றாம். இன்னும் இவற்றை மிகுதியாய்த் தெரியவேண்டுவோர் அவற்றைத் தனியே எடுத்துக் கூறும் நூல்களைப் பயின்றறிதல் வேண்டும். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/190&oldid=1625163" இலிருந்து மீள்விக்கப்பட்டது