பக்கம்:மறைமலையம் 3.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
187


இனி இப்பருவுடம்பில் நின்றுகொண்டே நமதுயிரை அருளிலே செல்லப் பழக்கும்வகை யாங்ஙனமெனின்; நம் நினைவை எந்நேரமும் ஓயாமல் திருவருட்சிந்தனையில் இருத்துவதொன்றாலே தான் அது கைகூடற்பாலதாகும். அங்ஙனம் நினைவை ஒரு வழிப்படுத்தித் திருவருளிலே பதிவித்தல் இலேசிலே கைகூடற்பாலதன்றாகலின், அதனை அங்ஙனம் செய்தற்கு எளிதான வழி சிறிது காட்டுகவெனின்; அது மூச்சுப்பயிற்சி செய்தலானும், சுழுமுனை நாடியில் நினைவை நிறுத்தும் இடம் அறிந்து நிறுத்தி ஒடுக்குதலானும் வாய்க்கும்.


 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/220&oldid=1626149" இலிருந்து மீள்விக்கப்பட்டது