பக்கம்:மறைமலையம் 3.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6

❖ மறைமலையம் 3 ❖


"வேதாசலனார் தமிழ், 'செந்தமிழ் -சங்கத்தமிழ்' என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுைைவயைத் தமிழ் நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன்'

என்றும்,

“தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும்எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்.

என்றும்,

அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியன்மாரை அளித்தது; ‘அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள்' என்று கூறல் மிகையாகாது" என்றும் போற்றுகிறார் (வாழ்க்கைக் குறிப்புகள்)

திரு.வி.க. அடிகளாரைப் பற்றி எழுதியுள்ள இக்கருத்துக்களை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்பின், அடிகளார்க்குத் தமிழுலகம் பட்டுள்ள கடப்பாடு மலைமேல் விளக்கென விளங்கும். அடிகளார் பிறப்பும் தொண்டும் ஆய்வும் வீறும் எத்தகு பெருமைக்குரியன என்பதைத் தமிழுள்ளங்கள் தளிர்ப்புறப் பாராட்டத் தவறா அல்லவோ!

தமிழுக்கு அடிகளார் செய்த செவ்விய பணி, அல்லது அடிகளாரால் தமிழ்மொழி பெற்ற நயப்பாடு எளிதா? அவற்றையெல்லாம் விரிய விரிய ஆராய்ந்த மொழி ஞாயிறு பாவாணர், 'மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம்' பாடினார். அப்பதிகத்தில் ஒரு பாட்டு; ஒரோ ஒரு பாட்டு:

"மூவா யிரமாண்டு மோது வடமொழியால் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டு வந்த அப்பர் அமரர் மறைமலை யார்’

என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/39&oldid=1624429" இலிருந்து மீள்விக்கப்பட்டது