பக்கம்:மறைமலையம் 3.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
57

பிறகும் அவர்கள் மாட்டு அன்பு பாராட்டி ஒழுகிய நம்மனோரை மறவாது ஒரோவொரு காலங்களில் அவர்க்கு முற்றோன்றித் தம்மாலாம் உதவிகளெல்லாம் செய்குவர் என்றும் யாம் கூறிய உண்மைப் பொருள் மேலெடுத்துக் காட்டிய மெய்ச்சரித்திரத்தால் நிலைபெறுதல் காண்க.

அவ்வாறாயின் நம்மிடத்து நீங்கா அன்புரிமை பாராட்டிய உறவினர் எல்லாரும் இறந்துபோன பிறகு சிறிதாயினும் நமக்கு எதிரே தோன்றக் கண்டதில்லையே யெனின்; மேலே காட்டிய உதாரணங்களில் இறந்து போனவர்கள் திரும்பவும் வந்து இங்குள்ளார்க்கு உதவி புரிதல் தெற்றென விளங்குதலின், சிலர்க்குத் தோன்றாதது கொண்டே எல்லார்க்குந் தோன்றுவதில்லை யென்று கூறுதல் பொருந்தாது. நல்லது, ஆவேச வடிவங்கள் சிலர்க்கு மாத்திரந் தோன்றுதலும் பலர்க்குத் தோன்றாமையும் என்னையெனிற் கூறுகின்றாம்.


 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/90&oldid=1626155" இலிருந்து மீள்விக்கப்பட்டது