இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* தமிழர் மதம்
309
மேற்காட்டிய அறங்கள் நடைபெறாமற் செய்து, கோயிலின் வருவாய்ப் பொருளையெல்லாந் தமக்கே உரிமையாக்கி வருகின்றார்கள்! தமிழ்ப் பொதுமக்கள் இனியும் உறங்கி யிராமல் உடனே விழித்தெழுந்து, கோயில்களின் வாயிலாக நம் பழந்தமிழ்மக்கள் செய்து போந்த அறங்களை மீண்டும் உயிர்ப்பித்து, அவற்றை நன்கு நடைபெறச் செய்தல் வேண்டும்.