❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
* மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
செய்து முடிக்கும் பல திறப்பொறிகளையும் பொறுமை யோடு அமைத்துக் கொடுத்த நுண்ணறிவினரின் எண்ணத்தின் வலிவை எவ்வாறு வியந்துரைப்பேம்! சோறும் நீரும் வேண்டாமல் தம் அறிவைப் பலநாளும் ஒருமுகப்படுத்தி யிருந்து அரியபெரிய உண்மை நூல்கள் எழுதிய புலவரது எண்ணத்தின் கட்டுப் பாட்டை எவர்தாம் எடுத்துச் சொல்ல வல்லார்? இங்ஙனமே எண்ணத்தின் வலிவால் இம் மண்ணுலகில் நடைபெறும் அருஞ்செயல்களை விரித்துச் சொல்லப் புகுந்தால் இவ்வேடு இட டங்கொள்ளாது. இந் நிலத்தின்கண் உள்ள மக்களின் முன்னேற்றமெல்லாம் எண்ணவலிவினாலேயே நடைபெற்று வருகின்றன; எத்தொழிலைப் பார்த்தாலும் அத் தொழி லினுள்ளே எண்ண வலிவிருக்கக் காண்பீர்கள். எண்ண வலிவில்லாதார் செய்யும் எதுவுஞ் சிறப்புடையதாகாது. இருளையும் ஒளியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! இருள் வந்து மூடுங்கால் எல்லாத் தோற்றமும் அற்றுப் போகின்றன; எல்லாவுயிர்களும் முயற்சி குன்றி உறங்கப் போகின்றன; மற்றுக், கதிரவன் ஒளி கீழ்ப்பாற் றோன்றுங்கால் அஃது எவ்வளவு கிளர்ச்சியோடு மினுமினு வென்று மிளிர்கின்றது; அப்போது எல்லாப் பொருள்களும் எவ்வளவு தோற்றப் பொலிவு வாய்ந்து துலங்குகின்றன! அந் நேரத்தில் எல்லாவுயிர்களும் எவ்வளவு மனக்கிளர்சியோடுங் களிப்போடுந் தத்தம் முயற்சிகளைச் செய்யப் புகுகின்றன! புறத்தே காணப்படும் இவ்விருவகைத் தோற்றங்களைப் போலவே, சோம்பலும் எண்ணவலிவும் உணரற்பாலனவாம். சோம்பலுள்ளவர்க்கு அறிவு மழுக்கம் அடைந்துபோக அவரது அறிவை அறியாமை இருள் வந்து முற்றுங் கவிந்து கொள்கின்றது. எண்ண வலிவுடைய வர்க்கோ அறிவொளியானது கிளர்ந்து விளங்கி எல்லாப் பொருள்களின் உண்மையையும் அவர்க்குப் பிழைபடாமல் அறிவிக்கின்றது. அதனோடு அருள்வழிப்பட்ட எண்ணம் உடையார்க்கு உடம்பின் உள்ளமைந்த கருவிகளெல்லாந் தூயவாய் வலிவேறித் திகழ்தலின், அவ்வகப்பொருள் அமைதிக்கு இசைய அவருடம்பின் முகம் முதலான புறத்துறுப்புகளும் அழகும் அமைதியுங் கவர்சியும் உடையனவாய்க் கிளர்கின்றன. அது மட்டுமோ, அவருடம் பெங்கும் அருளொளி நிறைந்திருத்தலால், அவர்தம் கைகளால் எவரைத் தொட்டாலும் அவர் உடம்பும் உள்ளமுந்