❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
ஒரு
ஒரே தன்மையாய் நடைபெற்றுச் செல்கின்றன. ஒரு நாளிற் பாதியை ஞாயிறு மாறாமல் விளக்கி வருகின்றது. மறுபாதியை பெரும்பாலுந் திங்கள் விளக்குகின்றது. வேனிற் காலத்தில் வெயில் கடுமையாய் எரிக்கின்றது. கார்காலத்தில் மழை அடுத்தடுத்து மிகுதியாய்ப் பெய்கின்றது. குளிர்காலத்திற் குளிரும் பனிக்காலத்திற் பனியுங் காணப்படுகின்றன. நிலத்தில் இட்ட விதைமுளைத்து மரஞ் செடி கொடிகளாகிப் பயன்றரப் பல நாட்கள் செல்கின்றன. அங்ஙனமே ஓர் ஆண்மகனுந் தாய் வயிற்றிற் கருவாய்த் தங்கி வளர்ந்து பிறந்து மகவாய்ப் பிள்ளையாய் இளைஞனாய் ஆண் மகனாய் முதியனாய் முதிரப் பல ஆண்டுகள் கழிகின்றன. இன்னும் இவை போன்ற பொது நிகழ்ச்சிகள் எண்ணிறந்தன. எல்லாம்வல்ல இறைவன் தனது பேரிரக்கத்தினாலுந் தனது பேரறிவினாலும் அமைத்து விட்ட இப்பொது நிகழ்ச்சிகள் அவ்வளவும் உயிர்களின் பெருநன்மையின் பொருட்டே நடைபெறுகின்றன. அல்லாமல், அவற்றிற்கு ஒரு சிறிதுந் துன்பத்தைத் தருதற்கல்ல. இந் நிகழ்ச்சிகளின் இயல்பைச் சிறிது நுனித்துக் காண்பார்க்கும் அவற்றில் துன்பத்தைத் தரும் பகுதியுங் குறைபாடுடைய பகுதியும் எள்ளளவும் இல்லையென்பது புலனாம். அவ்வாறிருக்க, நோயுங் கொலையுந் துன்பமுங் கவலையும் மூப்பும் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் இவற்றின் இடையிடையே யாங்ஙனம் வந்தன வென்று கேட்டால், இறைவன் வகுத்த அப்பொது நிகழ்ச்சிகளின் வழியே நின்று உயிர்கள் தம் அறிவை விளக்கி இன்பத்தை அடையாமல், தமக்கு இயல்பாகவேயுள்ள அறியாமை வழிப்பட்டுத் தம் அறிவையும் விருப்பத்தையுஞ் செய்கையையும் அப்பொதுநிகழ்ச்சிகட்கு மாறாக நடைபெற விடுதலால் மேற்கூறிய துன்பங்களெல்லாம் ஒன்றன்மேல் ஒன்றாய்க் கிளைப்பஆயின. நன்றாய் வெயிற்காயும் வேனிற்காலத்திலே நிலத்தை நன்றாய் உழுது மண்ணைக் கீழ் மேலாய்ப் புரட்டிக் காயவைத்துக் காலத்தே பெய்யும் மழையில் மண்ணைத் திருத்தி விதைத்தால் நல்ல விளைச்சலைப் பெற்று இன்புறலாம்; அவ்வாறின்றிப் பனிக்காலத்தே உழுது வெயிற்காலத்தே விதைத்தால் முளை சுருங்கிக் காய்ந்து பயன்றராமையொடு பட்ட பாட்டையும் பாழாக்கி வறுமைக்கும் நோய்க்குந்
அ