பக்கம்:மறைமலையம் 4.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96

❖ மறைமலையம் 4 ❖

ஏற்றுக்கொள்வது தமக்குத் தாழ்வென்றும் அதனை மறுத்துக் கூறுவது தமக்கு உயர்வென்றுங் கருதுதலே எல்லா மாந்தர்க்கும் இயற்கையாகக் காணப்படுகின்றது. இதனாலேதான் எவ்வளவு உண்மையான கொள்கையாயிருந்தாலும், எதிரிலிருப்பவர் நிலை தெரியாமல், அதனை அவர்க்கெடுத்துக் கூறுதலாகாது. அன்றிக் கூறினால், அவர் அதனை மறுக்கப் பிறகு இவரதனை எதிர்மறுக்கத் தாலையா வழக்கும், அதனடியாகச் சினமும் வருத்தமும் உண்டாகும் என்பதனை அறிவுறுத்தவே “வாதுமுற் கூறேல்” என்று ஔவையாரும் அருளிச் செய்தனர்.

அவ்வாறானால் எதனைப் பேசுவதானாலும் அதனைப் பேசுவதற்குமுன் சில திங்களோ அல்லது சில ஆண்டுகளோ தனியே ஓரிடத்தில் உள்ளம் பதிய நினைந்திருந்து, அதன் பின்னரும் அந் நினைவை ஏற்கும் நிலையில் மக்களுள்ளம் பதப்பட்டிருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தன்றோ பேசல் வேண்டும். இவ்வாறு பேசுவதென்று ஏற்பாடு செய்து கொண்டால் ஒவ்வொரு நொடியும் உலகியல் நடத்தற் பாருட்டுக் கலந்து பேசவேண்டிய நிலைமையில் உள்ள மக்களுக்கு அவ்வுலகியல் நடைபெறுவது எங்ஙனமெனின் இங்கே கூறியதன் கருத்து அவ்வாறன்று. உலகத்தார்க்குப் புதுமையாய்க் காணப்படும் ஒரு நன்மையை அல்லது உலகத்திற் பலரும் பலவாறு ஒன்றுபடாது நினைத்தற்குரிய ஓருண்மைக் கொள்கையைப் பரப்பி நிலைநாட்ட வேண்டுமென்று நினைப்ப வர்களே அதனைச் சில பல திங்கள் தனித்திருந்து எண்ணி அவ்வெண்ணத்தின் முனைப்பால் அதனைப் பரவச் செய்து பின் அதனை வெளியிட்டுக் கூறல் வேண்டும். உலகியல் நடத்தற்கு வேண்டும் மற்ற எண்ணங்களுங் கொள்கைகளும் பெரும்பாலும் எல்லார்க்குந் தெரிந்தன வாயிருத்தலால், அவற்றை நீண்ட காலந் தனித்திருந்து நினைக்க வேண்டுவதில்லை. ஒவ்வொரு நாளுங் காலை மாலையிலும் உறங்கப் போம் பொழுதுந் தாம் மற்றைநாளிற் செய்யவேண்டிய கடமைகளை நன்கு எண்ணிப் பார்த்து, அவை எளிதில் நிறைவேறும்படி உள்ளத்தே உறுத்தி நினைந்து விரும்பினால், அவை அடுத்த நாளில் இனிது முடியும். இக்கடமைகளின் பொருட்டுப் பிறரொடு கலந்து பேச நேருங்கால், அவர் தாங் கூறுவதனை மறவாமல் ஏற்றுக் கொள்ளும் வகைதெரிந்து பேசல்வேண்டும். அல்லது அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/129&oldid=1675418" இலிருந்து மீள்விக்கப்பட்டது