❖ மறைமலையம் 4 ❖ |
நோய்களைக் குறித்து பேசுதலும் ஆகாது.நினைப்பதும் ஆகாது, என நன்கு உணர்தல் வேண்டும்.
இன்னும், இக்காலத்தில் நோய்களை அறிவிக்கும் விளம்பரங்களும் அந்நோய்களைத் தீர்க்க மருந்துகள் விற்கும் அறிவிப்புத் தாள்களும் எங்கே பார்த்தாலும் ஆயிரக்கணக்காக நாடோறும் பரப்பப்படுகின்றன. இவைகளை வாங்கிக் கருத்தூன்றிப் படிப்பவர்களும், அவற்றிற் கண்ட மருந்துகளை ஆவலோடு வாங்கித் தின்பவர்களும் எண்ணிறந்தவராய்க் காணப்படுகின்றனர். இதுவேயுமன்றிப் பலவகை நோய்களின் கொடுமைகளை எடுத்துக் கூவிப் பலர்கூடும் அங்காடிகளில் மருந்து விற்போரையும் அவ்விடங்களிற் பார்த்திருக்கலாம். நோய்களைத் தீர்ப்பதற்கென்று பரப்பப்படும் இவ்வறிவிப்புகள் எல்லாம் அந் நோய்களை மேன்மேல் வருவிப்பதற்கும், அவற்றை நெடுகப் பரவச் செய்தற்கும் ஏற்ற வழிகளாய் இருக்கின்றன. இதனாலன்றோ மருத்துவர் தொகை மிகுதியாயில்லாத முற்காலங்களில் நோய்களும் மிகுதியாய் இல்லாதிருந்தன; இந்நாட்களிலோ மருத்துவர் தொகை மிகுதிப்படப்பட நோய்களும் புதியபுதியவாய் அளவின்றிப் பெருகிவருகின்றன. இங்ஙனம் நோய்கள் பல்குவதற்கு வாயில் யாதென்று நுணுகி ஆராயுமிடத்து, நோய் தீர்க்கும் மருந்துகளும் அவற்றைக் குறித்த அறிவிப்புகளும் நோய் தீர்ப்போரும் பலவகை நோய்களைப் பற்றிய நினைவுகளை மக்கள் உள்ளத்திற் பிறப்பித்துவி அந்நினைவுகள் வரவர வேர்ஊன்றி அந் நோய்களைத் தோற்றுவிக்கும் ஏதுக்களாய் அமைதலேயா மென்பது நன்கு புலனாகின்றது. ஆகையாற் செம்மையாய் இருப்பவர்கள் நோய்களைப் பற்றிய வரலாறுகளை உற்றுக் கேட்டலும், அவற்றைக் குறித்த அறிவிப்புகளைக் கருத்தூன்றிப் படித்தலும், மருந்துகளையும் மருத்துவர்களையும் நினைவில் வைத்தலுஞ் சிறிதும் ஆகாவாம். அங்ஙனமாயின் நோய்கள் மருந்துகளைப் பற்றிய அறிவிப்புகளும் மருத்துவர்களும் இல்லையானால் நோய்கொண்டோர் நோய் நீங்கப் பெறுவது யாங்ஙனமெனில், அவ்வறிவிப்புகளும் மருத்து வரும் வேண்டாமென்று யாம் மறுக்கவில்லை. உண்மையிலே நோயாளிகளாய் இருப்பவர்கள் மருந்துகளின் உதவியையும் மருத்துவர் உதவியையும் வேண்டிய