❖ மறைமலையம் 4 ❖ |
உணவு தூயதாய் இருத்தல் வேண்டும்; பிற உயிர்களைக் கொன்று எடுக்கும் ஊனைத் தின்னுதல் ஒருசிறிதும் ஆகாது. ஊன் தின்னும் புலி கரடி ஓநாய் முதலியன விலங்கினங்கள் எவ்வளவு கொடியனவாய், எவ்வளவு பயனற்றனவாய் இருக்கின்றன! புல்லையும் வைக்கோலையும் தழைகளையுந் தின்னும் யாடு மாடு குதிரை யானை ஒட்டை முதலான விலங்குகள் எத்துணை அமைதியும், எத்துணைப் பயனும் உடையனவாய் இருக்கின்றன! இவ் வேற்றுமையைக் கருதிப் பார்க்குங்கால், விலங்குகளினும் எத்துணையோ மடங்கு உயர்ந்த மக்கள் தூய சைவ உணவை உட்கொண்டுவரின் எவ்வளவோ சிறந்த நலங்களையெல்லாம் அடைவார்க ளென்பதனை உணர்கின்றன அல்லமோ? ஆகையால் அவ்வக்காலங்களுக்கு ஏற்ற தூய உணவைப் பசியெடுத்த நேரத்தில் மிகாமலுங் குறையாமலுஞ் செரிக்கும் அளவறிந்து உட்கொண்டுவரின் உடம்பு நல்ல நிலைமை யிலிருக்குமென்பது சொல்லாமலே விளங்கும், பெரும்பாலார் உணவை வாயிலிட்டவுடனே விழுங்கி விடுகின்றனர். இது பெரிதுங் குற்றமாகுமென்று இக்காலத்திய உடம்பு நூல் வல்லார் நன்கு ஆராய்ந்து உரைக்கின்றனர். வாயின்கண் ஓயாது சுரக்கும் உமிழ்நீரை இறைவன் வகுத்தது, அஃது உணவுடன் சேர்ந்து குழம்பாய் உள்ளிறங்கி விரைவிற் செரிக்க வேண்டுமென்னும் நோக்கம் பற்றியேயாம். உணவைச் செரிப்பித்தற்குரிய தன்மை மிழ்நீரில் அமைந்திருக்கிறது. வாயிலிடும் உணவு நன்றாக மிழ்நீரிற் கலக்க வேண்டுமாயின், அதனைப் பலமுறையும் மெல்லல் வேண்டும். இங்ஙனம் மெல்லுதலால் உமிழ்நீர் உணவில் மிகுதியாய்க் கலப்பதோடு, பின்னும் ஒரு நன்மையும் இருக்கின்றது. வாயினுள் அரைக்கப்படாமற் கீழ் இறங்கும் உ தீனிப்பைக்கு மிகுந்த உழைப்பைத் தருகின்றது புறத்தேயுள்ள உடம்பின் உறுப்புகட்கெல்லாம் இரவில் ஓய்விருக்கின்றது; அகத்தேயுள்ள தீனிப்பைக்கோ இரவிலும் ஓய்ச்சல் இல்லை; ஆகையாற், பகலிரவு இரண்டுபொழுதும் ஒழிவின்றி இயங்குந் தீனிப்பைக்கு மிகுந்த உழைப்பைக் கொடுத்தால் அது புண்பட்டு நோயை உண்டாக்கும். நன்றாய் மெல்லாமல் தின்னப்படும் உணவுகள் தீனிப்பைக்கு மிகுந்த உழைப்பினைத் தருதலினாலே தான் வயிற்றுளைச்சல் குலைநோய் முதலான கொடும் பிணிகள் உண்டாகின்றன. ஆதலால், நன்றாய் மென்று தின்னப்படும்
の
の
உணவு