❖ மறைமலையம் 4 ❖ |
நெருங்கினமையாலும், எதிர்பாராத வேறுசில வழிகளாலும் வரும் நோய்களைத் தீர்க்கும் பொருட்டு வல்ல மருத்துவரை அழைத்து அது தீரும் வழி தெரிதலும் இசைந்த சில மருந்துகளை உட்கொள்ளலும் நலமேயாம். அப்பொழுதுங்கூட யாம் முன்னரே விரித்து விளக்கியபடி தமது மன நிலையினையும் உடம்பின் நிலையினையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளுதலே நோய் விரைவிற்றீருதற்கு வழியாம்; இதுபற்றியன்றோ ஆன்றோரும் தனக்கு மருத்துவன் தானே” என்று மொழிவாராயினர்.
இனி, மனநிலையினையும் உடம்பின் நிலையினையும் ஒழுங்கு செய்து கொண்ட பின்னர் வேறு நினைக்கத் தகுவது யாதெனின்; கல்வியிற் சிறக்கவேண்டுமென்பதேயாம். கல்வியானது அறிவை விளக்கி அறியாமையினைப் போக்குவது. இந்த உடம்போடு கூடிப் பிறவியெடுத்தது எதன் பொருட் டென்று ஆராய்ந்து பார்த்தால், இவ்வுடம்பின் வாயிலாக அறிவை விளக்கி இன்பத்தைப் பெறுதற்கே யாமென்பது புலப்படுகின்றது. அறிவை விளக்கிக் கொள்ளாவிட்டால் இவ்வுடம்பினாற் பெற்ற பயன் சிறிதும் இன்றாம். கைவருந்தி மெய்வருந்தி மனம் புழுங்கி அல்லும் பகலும் உழன்று தேடித்தொகுத்த பொருளும் மனையும் நிலமுங் கூடவரப் போகிறதில்லை. அறிவும் அறிவோடு கூடித் தோன்றும் இன்பமுமே உயிரைவிட்டுப் பிரியாமல் அதனோடு எங்கும் ஏகும். ஆகையால் அத்தனைச் சிறந்த அறிவை மேன்மேல் விளங்கச் செய்யும் கல்வியைக் கற்றலில் நினைவை நிலைபெறச் செய்தல் வேண்டும். கற்ற கல்விப்பொருள் நினைவை விட்டு அகலா திருக்கும் படி நினைவை வலிமைபெறச் செய்தல் வேண்டும்."யான் கற்றபொருள்கள் அவ்வளவும் என் நினைவில் நன்றாய்ப் பதிந்திருக்கின்றன. யான் வேண்டும் போதெல்லாம் அவை என் நினைவில் விளக்கமாய்த் தோன்றும். யான் நினைவில் வலிமை பெற்றிருக்கின்றேன்” என்னுஞ் சொற் றொடர்களை அடிக்கடி நினைவுமுனைப்போடு சொல்லுக. உறங்கச் செல்லும்போதும் உறக்கம் நீங்கி விழிக்கும்போதும் இச் சொற்றொடர்களைக் கருத்தூன்றிச் சொல்லுக. இங்ஙனம் இம் மந்திர மொழிகளைச் சொல்லி வரவர எவ்வளவு மறதியுடைய வர்களும் அம் மறதி தீர்ந்து நினைவு மிகப் பெறுவார்கள்.
ம்