பக்கம்:மறைமலையம் 4.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
110

❖ மறைமலையம் 4 ❖

நின்று அதனை எளிதில் வருமாறு தமது அறிவின் நுட்பத்தால் வழிகாட்டி அதற்குத் தக்க முயற்சியும் எவர் செய்து காட்டு கிறார்களோ அவர்களையே எல்லாரும் விரும்பித் தேடுவர். ஆனதுபற்றிப் பொருள் தேடும் பல துறைகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தமது அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற தான்றனைத் தெரிந்தெடுத்தும் தாம் முயலல் அல்லாமலும், தம்போல் முயல்வார்க்கும் அம் முயற்சியில் இயன்ற உதவி செய்தல் வேண்டும்.

இனி, இங்ஙனம் ஒரு முயற்சியைத் தெரிந்து முயலுங் காலத்தும் உண்மைக்கு மாறு இல்லாமலும் பிறர்க்குத் தம்மால் தீங்கு வராமலும் பாதுகாத்து அம் முயற்சியை முட்டின்றிச் செய்தற்கு உறைத்து நிற்றல் வேண்டும். அதனைத் தொடங்கு வதற்கு முன் அதனை இவ்விவ்வாறு செய்தல் வேண்டுமென்றும் ஆராய்ந்து பார்த்தது போலவே, அதனைச் செய்து வருங்காலும் அதனை மேலும் மேலும் செவ்விதின் நடத்தும் வகைகளையும் ஆழ்ந்து ஆராய்ந்துகொண்டே செல்லுதல் வேண்டும். “அது நன்றாய் நடைபெறுக” என்னுஞ் சொற்றொடரை மந்திரமாகக் கொண்டு உருவேற்றுதலும் இடையிடையே செயற்பாலதாம். ங்ஙனமெல்லாம் கருத்தூன்றி நினைத்தலுஞ் சொல்லுதலும் கடைப்பிடித்துச் செய்து வருவார்க்கு அவரவர் தகுதிக்கேற்ற எவ்வகை முயற்சியும் நன்கு நிறைவேறும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/143&oldid=1675432" இலிருந்து மீள்விக்கப்பட்டது