❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
* மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
பொருட்டு அவரிடத்தில் இல்லாத நலங்களை இருப்பனவாகக் கட்டிப் பொய்த்துப் பேசுதல் வேண்டாம். இஞ்ஞான்றைத் தமிழ்ப் புலவரிற் பலர் ஒரு செல்வரிடத்தில்லாத நலங்களை இருப்பனவாக வைத்து வாய்கொண்ட மட்டும் மனங்கொண்ட மட்டும் தமிழ்ப் பாக்களாற் பாடுதலையே புகழ்ச்சியாகப் பிழைபடக் கருதுகின்றார்கள். தாங் கூறுவது பொய்யென்பது அப்புலவர் தம் மனத்திற்கும் நன்றாய்த் தெரியும் ; அவராற் பாடப்பெறுஞ் செல்வரும் அப்பொய்ப் புகழ்ச்சியுரை கேட்டு மகிழ்வரேனும் அவருள்ளத்திற்கும் அது பொய்யென்று நன்றாய்த் தெரியும்; இன்னும் அவ்விருவரையுஞ் சூழ்ந்திருப் பார்க்கும் அது பொய்யென்று தெரியும்; இங்ஙனம் எல்லாரும் பொய்யென்றறிந்த அப் புகழ்ச்சியுரை பின்னர் எல்லாரானும் ஏளனஞ் செய்யப்பட்டு அருவருப்பினைத் தருதலால், அது பிறகு நிலைபெறாமலே யழிந்து அப்புலவர்க்கு ஏதோர் உண்மைப் பயனையுந் தராமல் ஒழிகின்றது. இவ்வாறன்றி, அச் செல்வர்பால் உண்மையாக உள்ள உயர்ந்த தன்மைகள் சிலவற்றை மட்டுந் தெரிந்தெடுத்து, அவற்றை அவர் உருக்கத்தோடு சில சொற்களா லேனும் சுருக்கமுந் திறமுடைய சில செய்யுட்களாலேனும் புகழ்ந்து உரைப்பராயின், உண்மைப் புகழுரைகளாகிய அவை கூறுவார்க்குங் கேட்போர்க்கும் உள்ளக் கிளர்ச்சியினையும் நிலைபெற்ற மகிழ்ச்சியினையுந் தந்து பெரும் பயன் விளைக்கும். பண்டை க் காலத்திருந்த செந்தமிழ்ப் புலவர்கள் தமக்கு உதவி செய்த செல்வர்களை அவர்பாலுள்ள உண்மை நலங்களைக் கண்டு புகழ்ந்து பாடியதும், அச் செல்வர்கள் ஒரோவொருகாற் பிழைபட நடந்தவழி அப் பிழைகளை மிக இனிதாயும் மெலிதாயும் எடுத்துக்காட்டி அவர் திருந்துமாறு செய்ததும் புறநானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து முதலிய தொகை நூல்களிலுள்ள ஒப்புயர்வில்லாச் செந்தமிழ்த் தேன் பிலிற்றும் பைந்தமிழ்ப் பாடல்களால் நன்கு விளங்கா நிற்கின்றன. மற்று இக் காலத்தவரான தமிழ்ப் புலவர்கள் புகழ்ந்து கட்டும் பாட்டுகளோ பொய்யும் புளுகும் மலிந்தனவாய்க் கையிலெடுத் தற்கும் அருவருப்பினைத் தருகின்றன.
உ
எனவே, இனிய இயல்புகளுங் கல்வியறிவும் வாய்ந்தோர் தாம் பிறர்பால் ஓர் உதவியை வேண்டிஅவரைச் சார்ந்தொழு