❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
பயிராக்கினால் அவை ஏழெட்டு ஆண்டிற் பெரிய மரங்களாய் ஓங்கி வளர்ந்து பருந் தேங்காய்களைக் குலை குலையாய் ஓயாமற் காய்க்கின்றன: அம் மரங்களின் பருமையும் பயனும் அவ்வளவும் வெறு மண்ணிலுந் தண்ணீரிலுமிருந்தே உண்டாகின்றனவென்று அவற்றின் வளர்ச்சியை ஆழ ஆராய்ந்து பார்ப்பவர் எவரும் உரையார்; அவற்றின்கட் காணப்படும் மண்கூற்றில் ஒரு சிறு கூறு பருநிலத்திலும் ஏனைப் பெருங்கூறு நுண்ணிய நிலவெளியிலு மிருந்தே தோன்றுகின்றன: இங்ஙனமே அவற்றின்கண் உள்ள ஏனை நீரின்கூறு தீயின்கூறு காலின்கூறு வானின்கூறு என்பவை யெல்லாம் பெரும்பாலும் நீர்வெளி தீவெளி கால்வெளி வான்வெளி என்பவற்றினின்றே போதருகின்றன வென்று உணர்ந்து கொள்க. இஃது ஃது எதனால் அறிதுமென்றால், நிலத்தின்கண் நின்று அளவற்ற பருமரங்கள் முன்னே தோன்றியும் பின்னும் பின்னுந் தோன்றியும் நீண்ட காலம் நிலைபெற்று நிற்கவும் நிலத்திலுள்ள மண்துகள் சிறிதுங் குறையாதிருத்தல் கொண்டு அறிதும் என்பது. அங்ஙனங் குறையாதிருத்தலேயன்றி நுண்ணிய நிலவெளியிலிருந்து ஒவ்வொரு நொடிப்பொழுதும் அளவற்ற நுண்டுகள்கள் வந்து சேர்ந்து இந் நிலவுலகம் வரவரப் பருத்து வருகின்றதென்றும் இஞ்ஞான்றை வானநூலார் ஆராய்ந்து உரைக்கின்றார். அஃதொக்கு மேனும், பருத்து மரமாய் நின்றவை பின்னர் அழிந்து மண்ணும் நீருமாய் மாறிப்போதலால், அவைவளருங் காற் குறையும் நிலத்தின் துகள்களும் நீரின் துகள்களும் திரும்ப அவ்வாற்றால் நிறைக்கப்படுமென்று கொள்ளுதலே பொருத்த முடைத்தெனின்; முன்னரே தோன்றி நிலைபெற்று நிற்கும் மரத் தொகுதிகளையும், புதிய புதியவாய் முளைத்துப் பயிராகும் மரத் தொகுதிகளையும் சேர்த்துப் பார்க்குங்கால், அவற்றில் தாமே அழிந்துபடுவனவும், பிறரால் அழிக்கப்படுவனவும், மலையள வாகவுள்ள ஒரு பொருளில் அழிந்துபடும் ஒரு தினையளவிற்கே ஒப்பாகச் சொல்லப்படும். அற்றன்று, ஒவ்வோர் இமைப் பொழுதும் நிலவொளியிலிருந்து நிலத்தின்கண் வந்துசேரும் மண்துகள்கள் அளவிறந்தனவாயிருக்கின்றனவென்று மேலே சொன்னமையால் மரங்களின் வளர்ச்சியாற்
ள
குறையும் நிலத்துகள்கள் அவ்வாற்றால் நிறைக்கப்பட்டு வருகின்றன