பக்கம்:மறைமலையம் 4.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖
151

66

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

99


லகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பவாகலின், வ்வுண்மையை நன்காய்ந்துணர்ந்த உயர்ந்தோர் அதனை ஒப்பார்; அறிவிலார் ஆயிரக்கணக்காய்க் கூடிக்கொண்டு அதனை மெய்யென்று உரைப்பரேனும் அது பொய்யேயாதல் திண்ணம். தவத்திலும் அறிவிலும் முதிர்ந்த முனிவரர் இவ்வுலக நடைகளை முற்றும் முனிந்து, தமது யாக்கையையும் பற்றின்றி விடுத்து, நுண்ணுருவில் நின்றபடியாய் இறைவன் அருட்பேற்றையே நாடி மேலுலகங்களிற் செல்லுதலால், எல்லாப் பற்றுங் குற்றமும் உடைய மந்திரக்காரர் வேண்டுகோளுக்கு இசைந்தேனும் அல்லதவர் கட்டளைகட்கு அஞ்சியேனும் அவர்கள் தாம் வெறுத்துவிட்டுப் போன இவ்வுலகிற்குத் திரும்பிவந்து அவர் வேண்டியபடி யெல்லாஞ் செய்வரென்பது எட்டுணையும் பொருந்தாது. இனி, முருகப்பிரான் பிள்ளையார் முதலான தெய்வங்கள் இறைவன் மெய்யன்பர்க்கு அருள் செய்தற் பொருட்டு ஓரொருகாற் கொண்ட அருளுருவங்களே யாகலான், அவரெல்லாம் எல்லாவுயிர்கட்கும் எக்காலும் பொதுப்பட நின்று அருளும் நீரரேயல்லாமல், மந்திரக்காரர் விருப்பப்படி யெல்லாம் நடுநிலை வழுவி ஒரு சிலர்க்கு நன்மையும் வேறு சிலர்க்குத் தீமையுஞ் செய்வாரல்லர்; அதனால் அங்ஙனங் கூறுதலும் ஒரு சிறிதும் ஏலாது.மிகவுந் தூயரான தேவர்கட்கும் எட்டாத கடவுளும், அவரருளைப் பெற்ற அடியார்களும் எல்லா அழுக்கும் நிறைந்த மந்திரக்காரரின் ஏவல்வழி நிற்பரென்றல் நகைக்கற்பாலதேயா மென்க. அன்பால் அகங்குழைந்து, தஞ்செயலற்று, அருட்செயலின் வழியராய் நிற்கும் மெய்யடியார் தமக்கு மட்டும் இறைவன் எளியனாய் நின்று அவர் வேண்டிய வாறெல்லாம் புரிவனல்லது, ஏனையோர்க்கு அவன் எண்ணவும் சைக்கவும் படாதவனா மென்றுணர்க. இந்நிலவுலகத்தில் நல்லராயுந் தூயராயும் இருப்பவருங்கூட, மேலுலகங்களிற் சன்ற சான்றோரை உலக நன்மையின் பொருட்டு மீண்டும் இங்கே அழைத்துப் பேச முயன்றக்கால், அதற்கவர் இணங்கி எளிதில் வராமையும், அதன்மேல் அவர்கள் நெஞ்சங் குழைந்து குழைந்துருகி வேண்டியதன்பின் அவர் வேண்டாவிருப்பாய்த் திரும்பிவந்து, உலகப் பற்றைவிட்டுச் சென்ற தம்மை அங்ஙனம் வருந்தியழைத்துத் துன்புறுத்த வேண்டாமென்று அவர்கட்குக் கட்டளை தந்தமையும் மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/184&oldid=1675782" இலிருந்து மீள்விக்கப்பட்டது