❖ மறைமலையம் 4 ❖ |
எமது நூலில் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றேம். மேலுலகங்களில் ஆவியுருவிற் செல்லும் சான்றோர் தம்போல் நல்லராயிருப் பாரின் வேண்டுகோளுக்கே இணங்கிவர விருப்பம் இலராயின், காசுகொடுப்பார்க்கு வேண்டியபடியெல்லாம் செய்யும் மந்திரக்காரரின் விருப்பத்திற் கிசைந்து அவர் வருவரோ? இந்நிலவுலகத்திலிருந்து தூயராகி மேலுலகங்களிற் சென்ற சான்றோரை வருவித்தலே மந்திரக்காரர்க்கு இயலாதிருக்க, இயற்கையாகவே தூயராய் மேலுலகங்களில் இயங்கும் கடவுளரை வருவித்தல் அவர்க்கு எவ்வாறு கைகூடும்? ஆகவே, மந்திரக்காரர் தெய்வங்களையும் முனிவரரையும் வருவித்து, அவர் தந்துணையால் தாம் தாம் வேண்டிய நன்மை தீமைகளைச் செய்வரென்பது முழுப் பொய்யுரையேயாகும் அல்லது அறியாமையாற் சொல்லும் வழுக்குரையேயாகும் என்க.
அஃதப்படியாயினும், இவ்வுலக வாழ்க்கையிற் பற்று நீங்காமையால் மேலுலகங்களிற் செல்லும் நல்வினையின்றி இதனைச் சார உலவும் பேய் கூளி முதலிய இழிந்த ஆவி யுருவங்களை வருவித்து, அவை தம் உதவியாற் பிறர்க்கு நன்மை தீமைகளைச் செய்தல் மந்திரக்காரர்க்கு இயல்வதன்றோ வெனின்; அஃது இயல்வதேயாயினும், இத் தீய முறையிற் பழகும் மந்திரக்காரர் இதனாற் பெருந் துன்பத்தையுழந்து கொடுஞ் சாக்காட்டிற்கே உள்ளாவர். இஃது இந்நிலவுலகத்தின்மேல் உயிரோடிருப்பவரின்
சேர்க்கையை ஆராய்ந்து பார்த் தலினாலேயே இனிதறிந்து கொள்ளலாம். குடி, சூது, திருட்டு, புரட்டு, கூத்தியர் கூட்டுறவு முதலான தீவினையிற் பழகுமவர் தம்மைப்போல் அத் தீவினைகளிற் பழகுவரையே தேடிச் சேர்ந்து நேசங்கொள்வர்: அச் சேர்க்கையாற் சொல்லற்கரிய துன்பத்தையும் அடைவர்: தமது இயற்கைக்கும் பழக்கத்திற்கும் மாறான நல்லோரைக் காணவும் அவரொடு நட்புக் கொள்ளவுந் தினைத்தனையும் விரும்பார்; விரும்பாமையேயன்றி அந் நல்லோரைக் கண்டால் அருவருப்பதுஞ் செய்வர்; அல்லதவரை அணுகாமலே ஒழுகுவர். இவ்வாறு மண்ணுலக வாழ்க்கையிற் றீவினைகளிலேயே பழகித் தேர்ந்தவர், தாம் இதனை விட்டு இறந்தொழியுங் காலும் அத் தீவினையிற் பதிந்த உள்ளத்தை யுடையராகவே இறப்பர்; இறந்தபின் மேலுலகங் களிற் செலுத்துதற்கேற்ற நுட்ப அறிவும் நுட்பவுடலமும் தமக்கு
இம்