பக்கம்:மறைமலையம் 4.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖
155

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி


பச்சை இரத்தப்பலியால் ஆகவேண்டியிருந்தது. அங்ஙனம் மக்கட் பலிகொடுத்து அவ்வாவியுருவத்தின் உதவியைப் பெற்றிருந்தால், அவர் திரண்ட செல்வத்தை அடையலாம், பார்ப்பவர் வியக்கும்படி பல புதுமைகளைச் செய்து காட்டலாம். ஆனாற், பலவாற்றானும் உயர்ந்த அப் பெரியவரது உள்ளம் அக் கொடுந்தீவினையைச் செய்தற்குச் சிறிதும் இசையவில்லை. தமது உயர்ந்த அறிவு நிலையைச் சீரழித்துத், தம்மைக் கொடிய லங்கினுந் தாழ்மை பெறச்செய்து, அறக்கொடிய நிரயத் துன்பத்தில் அழுத்துதற்கு இப் பொல்லாத செயலினும் பிறிதொன்று வேண்டுவதில்லையென நடுக்கத்தோடும்

உணர்ந்து, அம் மந்திரக்காரர் கூட்டத்தைவிட்டு அகன்றார். இந் நிலவுலகத்தின் மேலிருந்த நாட்களில், தம்மையொத்த மக்களைக் கொன்று தின்று பழகி, இறந்தொழிந்தபின் இதனையடுக்கவே அவ் அவாவினாற்றிரியுங் கொடிய பேய்களும் உளவாதலால், இன்னோரன்னவற்றைத் தமக்கு உதவியாக அடக்கியாளப் புகுவோர் எத்துணைக் கொடுஞ்செயலுக்கு உள்ளாக வேண்டுமென்பதை யாம் இன்னும் விரித்துக் கூறுதல் வேண்டா. இத்தகைய கொடும்பேய்களை மகிழ்வித்தற்பொருட்டு இரக்கமில்லா வன்னெஞ்சக் கொடியரான மந்திரக்காரர் சிலர் செய்த தீச்செயலால், தம்மை அரிதிற்பெற்ற தாய்தந்தை யரினின்றும் பிரித்துக்கொண்டு போகப்பட்டுக் கொலையுண்ட இளஞ்சிறாரும் பலர்! தம் ஆருயிர்க்கினிய கணவனிலிருந்தும் குடும்பத்தாரிலிருந்தும் மயக்கிக் கொண்டுபோகப்பட்டுத் தம் வயிற்றிலுள்ள ளங் கருவோடு வெட்டுண்டு உயிர்நீத்த சூல்கொண் இளமகளிரும் பலர்! ஆனாலும், எல்லா இரக்கமுமுடைய இறைவன் அக் காடும்பேய்களின் ஆட்டத்தையும், அவற்றை மேற்சொல்லியவாறு கொண்டாடித் தீங்கிழைக்குங் கொடிய மந்திரக்காரரின் கொட்டத்தையும் நன்மைமிக்க ஆங்கில அரசின் வாயிலாகப் பெரும்பாலுந் தொலைத்து வருகின்றான். எவற்றுக்கும் அஞ்சாமற் கொடுந் தீவினைகள் செய்வோரை அடக்கி ஒறுத்தற்கு இந் நல்லரசினர் ருக்கையில், அதன் பொருட்டுத் தீய பேய்களைக் கைப்பற்ற வேண்டுமென்பது சிறிதும் அடாது. அன்றி, அரசினர் ஒறுப்புக்கு அத் தீயோர் தப்பிக் கொளினும், எல்லாம்வல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/188&oldid=1675784" இலிருந்து மீள்விக்கப்பட்டது