பக்கம்:மறைமலையம் 4.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
156

❖ மறைமலையம் 4 ❖

இறைவனொருவன் எங்கும் உளனாகலின், அவனது ஒறுப்புக்கு அவர் தப்புதல் இயலாது.

கொடும்பேய்களை

அங்ஙனங் உறவுகொள்ளுதல் குற்றமேயாயினும், அம்மைநோய் வெப்புநோய் கொள்ளைநோய் முதலியன ஊரிற் பரவாமல் நீங்கும்பொருட்டு, மாரி பிடாரி இயக்கி எல்லையம்மன் வீரன் கருப்பன் முதலான சிறு தெய்வங்களை வணங்குதல் இன்றியமையாததன்றோவெனின்; இவ்வுலகத்திற் காணப்படும் எண்ணிறந்த உயிர்களுக்கு எண்ணிறந்த உடம்புகளையும், அவை அவ்வுடம்புகளோடு கூடி வாழ்வதற்கு இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துப் பலதிறப் பொருள்களையும் வகுத்துக் கொடுத்தவன் எல்லா அறிவும் எல்லா வல்லமையும் உடைய முழுமுதற் கடவுள் ஒருவனேயாம். அவனையின்றி ஓர் அணுவும் அசையாது. எவன் இந்த உடம்பை நமக்குக் கொடுத்து இந்த உலக வாழ்க்கையில் நம்மைக் காணர்ந்து இருத்தி வைத்தனனோ, அவன் நாம் இங்கிருக்க வேண்டிய காலம் வரையில் நம்மைப் பாதுகாத்து, நம்மை இங்கிருந்து அகற்றவேண்டிய காலத்தில் அகற்றி வருகின்றான். அவன் நம்மைப் படைக்கும்போது அங்ஙனம் செய்யாமல் அதனைத் தடுக்கவல்லவர் எவரும் இல்லை; அவன் நம்மைக் காக்கும் போதும் அதற்கு மாறாய் நின்று அதனைச் சிதைக்க வல்லவரும் எவரும் இல்லை; இவ்வுலகத்தினின்று நம்மை அவன் அகற்றும் போது அதனைத் தடுப்பவரும் எவரும் இல்லை. இங்ஙனம் இவ்வுலகத்திலும், ஏனையுலகங்களிலும் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் அவனையின்றி யேனும் அல்லது அவனுக்கு மாறாயேனும் நடவாமையால், மேற்கூறிய சிறு தெய்வங்கள் தாமாகவே மக்கட்கு நோயை வருவிக்கவும் பின்னர் அவற்றை நீக்கவும் வல்லனவென்று கூறுதல் முற்றும் அறியாமையேயாகும். இச் சிறு தெய்வங்களைக் கனவிலும் நினையாத துலுக்கர் கிறித்துவர் முதலானவர்கட்கு அவரவர் வினையால் நோய்கள் வருதலும் போதறும்போலவே அவற்றை நம்பி வணங்கும் இந்து சமயத்தவர்க்கும் அவர்தம் வினையால் நோய்கள் வருதலும் போதலும் இயற்கையாய் நிகழ்கின்றன. இச் சிறு தெய்வங்களை வணங்காதவர்க்கு நோய் வருதலும், அவற்றை வணங்குவார்க்கு நோய் தீர்தலும் உண்மையானால், அவற்றை வணங்காத துலுக்கர் கிறித்துவர்க்கு மட்டும் தீராத நோய் வருதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/189&oldid=1675462" இலிருந்து மீள்விக்கப்பட்டது