❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
இ
வந்து நின்று அன்னார்க்கு உதவி செய்தலை மேள்கொள்வர். ங்கிருந்து நன்மை செய்தலிலேயே ஓவாது முயல்வார்க்கு எதிர்பாராமல் நேரும் இடர்களையும் அவர் முன்னறிந்து விலக்கு கின்றனர். மறை பொருளாராய்ச்சியில் தேர்ந்த நல்லோரான துரைமகன் ஒருவர் (C.W. Lead Beater). ஒரு நகரத்தில் அமைதியான ஒரு தெரு வழியே ஓர் இரவு நடந்து சென்றார். அவ்விரவு மழையும் புயற்காற்றும் மும்முரமாய் இருந்தன. அவர், தமது கையிற் பிடித்திருந்த குடை காற்றாற் பிடுங்கப்படாமைப் பொருட்டு அதனை நிமிர்த்தி இறுகப் பிடித்தற்குப் பெரிதுந் தத்தளித்தார். அந் நேரத்தில் அவர் திடுக்கிடுப்படியாகப் “பின்னே குதி!” என்னுஞ் சொற்கள் அவர் செவியின்கண் வந்து கூவின. உடனே ஏதொன்றும் நினைத்தற்கு நேரம் இல்லாமலே அவர் திடுமெனப் பின்வாங்கிக் குதித்தார். அங்ஙனம் அவர் குதிக்கையில் அவரது கைக்குடை முன்னே சாய்ந்தது; கூடவே, பேருருவினதான புகைப் போக்கி மூடுந் தகட்டுக்குடம் ஒன்று அவர்க்கெதிரில் மூன்றடி விலகிப் பேரொலியோடும் மேலிருந்து கீழ் விழுந்தது.அக்குடத்தின் எடையும் அது கீழ் விழுந்த விசையும் நோக்குங்கால், அஃது அவர்மேற் பட்டிருந்தால் அவரை உடனே நசுக்கி உயிர்மாளச் செய்திருக்கும். ஆனால், ஆவி வடிவில் நின்று கூவிய பெரியவரின் குரலொலி அவரை அவ்விடருக்குத் தப்புவித்தது.
இன்னும், ஒரு வெள்ளைக்காரப் பெருமாட்டி ஒருகால், மிகவுங் கடுமையாக நடந்த ஒரு தெருச்சண்டைக் கூட்டத்தின் நடுவே அகப்பட்டுக் கொண்டார். அவ்வம்மையாரைச் சூழ ஆண்மக்கள் பலர் கடுமையாக அடிக்கப்பட்டுக் கீழ்விழுதலைக் கண்டு தமக்கும் அங்ஙனமே நேருமென்று அவர் எதிர்பார்த்தார்; னென்றால், அக் கூட்டத்தைவிட்டுத் தப்பிப்போவது அவர்க்கு முற்றிலுங் கூடாததாயிருந்தது. அந் நேரத்தில் அவர் சடுதியில் தாம் அக் கூட்டத்தினின்றுஞ் சுழற்றியெடுக்கப்படுவதாக உணர்ந்தார்; பின்னர் ஓர் இமைகொட்டும் முன், சண்டை நடக்குந் தருவிற்குப் பக்கத்தே நெடுகச் செல்லும் மற்றொரு தெருவின்கண் ஏதோர் இடருமின்றி அவர் தன்னந் தனியே நிற்கக் கண்டார். பக்கத்துத் தெருவில் இன்னுஞ் சண்டை நடக்கும் ஓசை அவர்க்குக் கேட்டது. தமக்கு நேர்ந்ததைப் பற்றி நினைந்து அவ்வம்மையார் பெரிதும் வியப்படைந்து கொண்டிருக்கையில்,
இ
சிறு