பக்கம்:மறைமலையம் 4.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
166

❖ மறைமலையம் 4 ❖

❖ ❖

கொள்கின்றார்கள். அவை யாவையோவெனின்; வசியமாக வேண்டியவரோடு சேர்ந்திருந்த பொருள்களேயாம்; அப் பொருள்கள் அவர்கட்கு இயற்கையால் உரிய மயிர் நகம் இரத்தம் முதலியனவும், செயற்கையால் உரிய ஆடை, அணிகலன்கள், புழங்கும் ஏனம், எழுதுங் கடிதம், பயிலும் புத்தகம் முதலியனவும் ஆம்; இவ்வாறிருவகையால் உரிய ஒருவர் தம் ஒரு மயிர்ச்சுருளையேனும், நகக்களைவுகளையேனும், ஒரு சொட்டு இரத்தத்தையேனும், அவர் அணிந்து கழித்த ஆடையில் ஒரு துண்டையேனும், ஒரு நகையையேனும், அவர் உணவெடுத்த ஒரு தட்டையேனும், எழுதிய அல்லது தொட்ட ஒரு கடிதத்தையேனும், பயின்றதொரு புத்தகத்தை யேனுங் கைப்பற்றிக்கொண்டு, அப்பொருளின் வாயிலாக அவரது உள்ளத்தை வசியஞ் செய்து விடுகின்றார்கள்.

அஃது யாங்ஙனம்? அவருடன் சேர்ந்திருந்த அப் பொருள்கள் உயிரில்லாத வெறும் பருப்பொருள்களாய் அவரினின்றும் வேறு பிரிக்கப்பட்டனவாதலால், அவற்றுள் ஒன்றைக் கொண்டு அவரை வசஞ் செய்தற்கு ஏதொரு தொடர்புங் கண்டிலமாலெனிற் கூறுதும்: ஒருயிர்ப் பொருளோடு சேர்ந்திருந்த ஏனையுயிரில் பொருள்களெல்லாம் அவ் வுயிரின் நினைவுகளாலுஞ் செயல்களாலும் பதிவு செய்யப்பட்டு, அவ்வுயிரோடு தமக்கு உளதாய தொடர்பினையும் அவ்வுயிரின் றன்மைகளையுங் காட்டும் இயல்பினவாய் இருக்கின்றன. இவ்வாறு ஓருயிரின் சேர்க்கையால் அதனோடு சேர்ந்திருந்த

பாருள்களிடத் துண்டாகும் பதிவுகள் எக்காலத்தும் அழிவ தில்லை. ஓர் உயிர் தான் இருந்த உடம்பை விட்டுச் சென்று பல நுாற்றாண்டுகள் கழிந்தாலும், அதனோடு சேர்ந்திருந்த பொருள்கள், தம்மிடத்துள்ள பதிவுகளைக் காணவல்லார்க்கு, அவ் வுயிரின்றன்மைகளை நன்கு விளங்கக் காட்டுகின்றன. ஒலியெழுதி (Phonograph) என்னுங் கருவியானது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இருந்தோர் பாடிய பாட்டுகளையும் பேசிய பேச்சுக்களையும் அவர் பாடிய பேசியபடியாகவே ஓர் இழையளவும் பிசகாமல் இப்போது பாடியும் பேசியுங் காட்டுதல் போல, இவ்வுலகின்கண் உள்ள எல்லாப் பொருள் களுந் தம்மொடு சேர்ந்திருந்தார் நினைவு சொற்செயல்களையும், வாழ்க்கையின் இயல்புகளையும், பிறவற்றையுந் தெளிவுற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/199&oldid=1675470" இலிருந்து மீள்விக்கப்பட்டது