❖ மறைமலையம் 4 ❖ |
ஒரு
பொருளில் ஒரு சிறு துண்டை நுண்ணுணர்ச்சியிற் சிறந்த மாதரார் (Mrs. Gridge) ஒருவர் கையிற் கொடுத்தார். அஃது ன்னதென்றும், அஃது அவ்வறிஞரிடத்தில் நெடுநாளாக உள்ளதென்றும், அவர் அறியார். அம் மாதர் அதனைக் கையில் ஏற்று, அதன்மேற் றமது கருத்தை நிறுத்தியதும் பின்வருமாறு கூறுவாரானார்: “ கடலும் அதன்மேற் கப்பல்கள் பாய்விரித்து ஓடுதலுந் தோன்றக் காண்கின்றேன். இஃது ஒரு தீவாக இருத்தல் வேண்டும்; ஏனெனில், அதைச் சூழ வெறுந்தண்ணீர் காணப்படுகின்றது. இப்போது யான் மரக்கலங்களுள்ள இடத்தினின்றுந் திருப்பபட்டு, நிரம்பவுந் திகிலைத் தரும் ஏதோ ஒன்றனைக் காண்கின்றேன். செங்குத்தான ஒரு மலைமேனின்று ன நெருப்புக்கடல் கக்கப்படுவது போலவும், அது கொதித்துக்கொண்டே விழுவதுபோலவுந் தோன்றுகின்றது. இத் தோற்றமானது என் உள்ளமெங்கும் ஊடுருவி, எனக்குப் பெருந்திகிலை விளைவிக்கின்றது. அந் நெருப்பு வெள்ளம் இப்போது ஓடிக் கடலுட் பாய்கின்றது; கடல்நீர் மிகக் கொதிக்கின்றது. யான் அதன் ஒரு பக்கத்தில் நிற்பது போற் காண்கின்றேன்." இவ்வாறு அம் மாதரார்க்குண்டாகிய பெருந்திகில் ஒரு மணி நேரம் வரையில் தணியவில்லை; அவர் உண்மையாகவே அவ்விடத்திற் போயிருந்து, அதனைக் காண்பது போற்றோன்றினார். இவர் விளக்கிக் கூறியதொவ் வொன்றும் முற்றிலும் உண்மையாகவே இருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகட்குமுன் உருகியோடிக் குளிர்ந்த ஓர் எரிமலைக் குழம்பின் ஒரு சிறு கட்டி தன் வரலாறு முழுமையும் இங்ஙனம் இயற்கை நுண்ணுணர்வுடையார்க்கு இனிது புலப்படுக்கு மென்றால், எவ்வகைப் பொருள்களுந் தம்மோடு தொடர் புடைய பாருள்களுந்தம்மோடு தொடர்புடைய ஏனைப் பொருள்களின் இயல்புகளைப் புலப்படுத்து தற்குரிய நுண்பதிவுகள் வாய்க்கப் பெற்றிருக்கின்றனவென்பது மறுக்கப்படாத பேருண்மையாய் நிலைபெறுமன்றோ?
இன்னும் இதனை விளக்குதற்கு வேறுமோர் உண்மை நிகழ்ச்சியினையும் இங்கெடுத்துக் காட்டுவாம்: இங்கிலாந்தி லுள்ள மான்செஸ்டர் நகரத்தில் ஒரு நாள் ஓர் இளைஞன் இனிது காலங்கழித்தல் வேண்டித் தனது வீட்டை விட்டுப் புறப்பட்டு நாட்டுப்புறத்தை நோக்கிச் சென்றான். சென்றவன் அன்று மாலையுந் திரும்பி வரவில்லை, அடுத்த நாளும் வரவில்லை,