பக்கம்:மறைமலையம் 4.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖
171

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

க்


ப்

கயில்

அதற்கடுத்த நாளும் வரவில்லை; அதனால், அவன்றன் குடும்பத்தார் மிகவுந் திகிலடைந்து அவன் இன்று வருவன், நாளை வருவன் என்று எதிர்பார்த்த வண்ணமாய் வருந்தலானார்; இங்ஙனமாக ஒரு கிழமை கடந்துவிட்டது. இன்னும், அவன் திரும்பி வந்திலன், அவனைப்பற்றி ஏதொரு செய்தியுங்கூடத் தெரியவில்லை. அதனால் அக் குடும்பத்தார் ஆற்றாமல் நைந்துருகியழுதலைக் கண்ட ஒரு நண்பர். அவ்விளைஞன் அணிந்திருந்த உடுப்புகளில் ஒன்றை வாங்கி, அது மற்றப் பொருள்களின் தொடர்பைப் பெறாதபடி அதனைக் கருத்தாய்த் தனியே மடித்து எடுத்துக் கொண்டு, பொருட்பதிவுணர்ச்சி (Psychometric sense) வாய்ந்த டெட்லோ (Mr. J.B. Tetlow) என்பவர்பாற் சென்றனர். நிகழப் போவதைச் சான்றாகக் கண்டுணரும் பொருட்டு மற்றொரு நண்பரும் அவர் கூட போயிருந்தார்.காணாமற்போனவன் ஆடை டெட்லோ என்பவர் கையிற் கொடுக்கப்பட்டது. அவர் அதனைக் எடுத்தவுடனே, கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கினவனைப்போல் இருபது நிமிடங்கள் வரையில் உணர்வின்றிக் கிடந்தார். திரும்பவும் அவர் உணர்வு வரப்பெற்று எழுந்தபின், அவர்பால் வந்த நண்பர் தாம் அவரைக் காண வந்தது, சடுதியிற் காணாமற் போன தம் நேயர் ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுதற்கேயாம் என்று தெரிவிக்க, அவர்க்குத் தெரியாதிருந்த பல உண்மை நிகழ்ச்சிகளையும் டெட்லோ மிகவுந் திருத்தமாக எடுத்துக் கூறினார். அங்குள்ளவர் எவர்க்குமே தெரியாத ஓர் ஊரில் ஓர் யாற்றையும், அவ் யாற்றிற் படகுகள் நிற்கும் இடத்திற்குச் செல்லும் ஓர் இடுக்கு வழியிலே, காணாமற் போன அந்த ஆண்மகன் சென்றமையும், அவன் அவ் யாற்று நீரில் அமிழ்ந்தி இறந்து போனமையும், அவ்விடங்களின் அடையாளங்களும் அவரால் மிகவுஞ் செவ்வையாக எடுத்துச் சொல்லப்பட்டன ன. ஆனால், அவனது உடம்பு யாற்றங்கரைச் சேற்றிற் புதைந்து கிடந்தமையால் எவ்வளவோ முயன்று தேடியும் அஃது அகப்பட வில்லை; பின்னர் அவன் காணாமற்போன பதினான்காம்நாள், ட்லோ என்பவராற் குறிப்பிடப்பட்ட அதே இடத்தில் அது மிதக்கக் கண்டார்கள். பிறகு, அவன் தானாக விழுந்திறக்கவில்லை யென்றும், தற்செயலாக வீழ்ந்திறந்தனன் என்றும் அவர் முன்னரே அறிவித்தபடியே, பின்னர்ச் செய்த ஆராய்ச்சியும்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/204&oldid=1675793" இலிருந்து மீள்விக்கப்பட்டது