பக்கம்:மறைமலையம் 4.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖
195

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி*


எமக்கு நோன்பு நாளாகையாற் பலகாரந்தான் பண்ணிணோம்” என்று பெருமை பேசிக்கொள்கின்றார்கள்; ‘பலகாரம்' என்னுஞ் சொல்லோ ‘பலாகாரம்’ என்னுஞ் சொல்லின் திரிபாகும். பலாகாரம் என்பது ‘பல’ ஆகாரம்' என்னும் இரண்டு சொற்களாய்ப் பிரிந்து ‘பழமாகிய உணவு' எனப் பொருள்படும். சான்றோர்கள் தாம் பட்டினி கிடக்கும் நாட்களிற் பசியின் கொடுமை தணித்தற்குச் சில பழங்களை மட்டும் அயின்று வந்தமை யால்,நோன்பு நாட்களிற் கொள்ளும் அவ்வுணவு ‘பலாகாரம்' எனப் பெயர் பெறலாயிற்று. ஆனால் இக்காலத்துப் பேரூண் அடைக்கும் மாந்தர்களோ, மற்றை நாட்களைவிட நோன்பு நாட்களில் நெய் சொட்டச் சொட்டச் செய்த இலட்டும் வாதுமைக் கொழும்பாகு உப்புமா உழுந்துவடை கடலை உருண்டை உருளைக்கிழங்குத் தோய்ப்பு வாதுமை நொய்ப் பொங்கல் இட்டிலி தோசை முதலிய மிகக் கொழுமையான உணாப் பண்டங்களுக்குப் ‘பலகாரம்’ எனப் பெயர் வைத்துக் காண்டு அவற்றை நிரம்பத் தின்கின்றார்கள். இவ்வாறு அளவுக்கு மிஞ்சித் தின்பதனாலேயே இவர்கள் இங்ஙனம் நோன்பு நோற்கும் நாட்களுக்குப் பின் நாட்களில் வயிறு கெட்டுப் பலவகை நோய்களுக்கு ஆளாகின்றார்கள். இந் நாட்டிலுள்ள மக்கள் நோய்ப்படும் நாட்களையும், அந் நாட்களுக்கு முன்நாட்களில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நன்காராய்ந்து பார்ப்பவர்க்கு யாங் கூறுவதன் உண்மை இனிது புலனாம். எனவே, பட்டினிகிடக்கும் பட்டினிகிடக்கும் நாட்களிற் சில பழங்களையும் பாலையுந் தவிர வேறு வலுவான பண்டங்களை உட் கொள்ளுதல் ஆதாதென்பது விளங்கற்பாலதாம். இம் முறைக்கு மாறாக நடப்பவர்க்குக் கவர்ச்சி ஆற்றல் உண்டாகாமையோடும் நோயும் வரும். ஆதலால், கவர்ச்சி முறையைக் கைப்பற்றி ஒழுகும் நாட்களிற் பாலையும் பழம் வாதுமைப் பருப்பு முதலான சிறிது சிற்றுண்டிகளையும் அன்றி, வேறு எவற்றின்மேலும் நினைவைச் செல்லவிடற்க.

இவ்வாறு வசியத்தின் பொருட்டு நோன்பியற்றும் நாட்களில் நிரம்பவுங் கருத்திற் பதித்துச் செயற்பால தொன்றுண்டு. அஃது என்னையென்றால், உடம்பின் அகத்தையும் புறத்தையும் வெந்நீர் கொண்டு கழுவித் தூய்து செய்தலேயாம். உடம்பின் புறத்தைக் தான் நீரிற் குளிப்பித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/228&oldid=1675806" இலிருந்து மீள்விக்கப்பட்டது