பக்கம்:மறைமலையம் 4.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖
209

* மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி


நிலையுமாகிய எல்லாம் இதுமுற்ற எடுத்து முடியக்கூறும் முழுமுதற் பெருநூலாம். இதனை வறிதே வைத்து அன்பினால் வழிபட்டு வருவார்க்கும் எல்லா மந்திரங்களும் எல்லாக் கவர்ச்சி களும் எளிதிலே கைகூடுமென்றால், வேறிதன் பெருமையை விரித்துரைப்பதேன்? இனி இதனையடுக்க வைக்கற்பாலன: மூன்றாண்டுக் குழந்தையாயிருந்த ஞான்றே இறைவனையும் இறைவியையும் நேரே கண்டு அவர் குழைத்தூட்டிய ஞானப் பாலுண்டு, முழுமுதற் கடவுள் உண்மையை அக் கடவுளின் சிறப்பு நிகழ்ச்சிகளால் எவர்க்கும் விளங்கக்காட்டி, இத் தமிழ்நாட்டை ஒரு தேவநாடாக்கி, அதற்கொரு தெய்வ முதலாசிரியராய்த் திகழ்ந்த திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களும், அங்ஙனமே தெய்வப் பெற்றியினராய் விளங்கிய திருநாவுக்கரசு நாயனார், சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரப்பதிகங்களும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பதினோராந் திருமுறை, திருத்தொண்டர் புராணம் என்பனவு மாம். இனி, இவற்றையடுக்க வைக்கற்பாலன: இறைவன் திருவருளால் உந்தப்பெற்று முப்பொருளாராய்ச்சியை முதன்முதற் கண்ட மெய்கண்டதேவநாயனார், தாங்கண்ட அவ்வாராய்ச்சிப் பரப்பெல்லாம் ஒருவழித் தந்து முறைப்படுத்து அருளிச்செய்த தனிப் பெருந் தமிழ்மெய்ம் முதல் நூலாகிய சிவஞானபோதமும், அதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படுந் திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், இருபா இருபஃது, உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா, கொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், போற்றிப் பஃறொடை, சங்கற் பநிராகரணம், நெஞ்சு விடுதூது என்னும் பதின்மூன்று மெய்கண்ட நூல் களுமாம். இனி, இவற்றை யடுக்க வைக்கற் பாலன: பிற்காலத்துச் சான்றோரான குமரகுருபர அடிகள், தாயுமான அடிகள் முதலாயினார் அருளிய அருட்செம்பாடல்களுஞ், சிவஞான முனிவர் அருளிச்செய்த சிவஞான போதப்பேருரையும், இந் நாளில் அரிய பெரிய ஆராய்ச்சிகள் செய்து அறிஞர் எழுதும் உரைநூல்களுமாம். இனி, இவற்றையடுக்க வைக்கற்பாலன: கிறித்து சமய வேதமாகிய விவிலியமும், மகமது சமய வேதமாகிய குரானும் ஆகும். புறச்சமய நூலாகிய இவை தம்மை மேற்கூறிய அருந்தமிழ்த் தெய்வ மறைகளோடு உடன் வைத்து

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/242&oldid=1675813" இலிருந்து மீள்விக்கப்பட்டது