❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
வ
களையும் அறிவுறுக்கும் விவிலியம் (Bible) குரான் (koran) என்னும் மறைகளை மேற்குறித்த தமிழ் நூல்களோடு உடன் வைத்தல் சாலப் பொருந்துவதேயா மென்க. மேற்குறித்த நூல்களில் தொல்காப்பியமும், 'பரிபாடல்', 'திருமுருகாற்றுப்படை' அல்லாத ஏனைச் ஏனைச் சங்க இலக்கிய நூல்களும், எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவான அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பெரும் பொருள்களை இலக்கண வகையாலுஞ் சுவை மிகுந்த இலக்கிய வகையாலும் வைத்து விரித்து விளக்குதலின், அவை தமிழ்ப் பொதுமறைகள் அல்லது வேதங்கள் என வழங்குதற்கு உரியனவாகும். மற்றப் ' பரிபாடல்', 'திருமுருகாற்றுப்படை' என்னுஞ் சங்கத் தமிழ் நூல்களுந், திருமந்திரம் அல்லாத திருவாசகந் தேவாரம் முதலான பதினொரு திருமுறைகளும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை முருகன், சிவன், திருமால் என்னுஞ் சிறப்புப் பெயர் களால் வழங்கி அவர் தம்மை வணங்குதலும் வாழ்த்துதலுஞ் செய்கின்றமையின், அவை சைவசமயத்தவர்க்கே யுரிய தமிழ்ச் சிறப்புமறைகள் என வழங்கற்பாலனவாகும். இனித் திருமந்திரமும், சிவஞானபோதம் முதலான மெய்கண்ட நூல்கள் பதினான்குஞ், சிவம், உயிர், மலம் என்னும் முப்பொரு ளாராய்ச்சிகளும், உயிர் மலப்பற்று நீங்கிச் சிவத்தைச் சென்று தலைக்கூடுமாறும் விரித்துக் காட்டிச் சைவசமயத்தவர்க்கே உரிய சிவாகமங்களா மென்று கடைப்பிடித்தல் வேண்டும். ஏ னை விவிலியமுங் குரானுங் கிறித்துவர்க்கும் மகமதியர்க்கும் உரிய வேதங்கள் அல்லது ஆகமங்களாகும். இனி இற்றை அடுக்க வைக்கற்பாலன: பொய்கையாழ்வாரும் பேயாழ்வாருந் திருமாலை வழுத்தி அருளிச் செய்த அருந்தமிழ்ப் பாட்டுகளே யாகும். இவை தம்மைச் சைவசமய நூல்களை யடுக்க வையாமல், விவிலியங் குரான் என்னும் நூல்கட்கும் பின்னே வைக்க வென்றதூஉம், ஏனைப் பத்தாழ்வார்களின் பாடல்களைச் சேராமல்விட்டதூஉம் என்னை யெனிற் கூறுதும்; பிறப்பு இறப்புக்களில்லா இறைவியின் வடிவாகிய திருமாலுக்குப் பிறப்பு இறப்புக்கள் கூறும் புராணக்கதைகளைத் தழுவிக் கண்ணன் இராமன் என்பாரையும் திருமாலோ டொப்ப வைத்துப் பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும் பாடிய பாட்டுக்களை, முழுமுதற் கடவுளை அங்ஙனம் பிறப்பு இறப்புக்களுட்படுத்து
வ
உ
னி
L