பக்கம்:மறைமலையம் 4.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖
221

* மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி


நீரிலே அம்மையையும் புகுந்திடுமாறு மனத்தான் நினைந்து வேண்டிப் பின்,

“பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடே லோ ரெம்பாவாய்

என்னும் மந்திரத்தை நாவாலுஞ் சொல்லி வேண்டுக. இவ்வாறு மந்திரஞ் சால்லி வேண்டியவளவிலே அம்மையும் அப்பனும் அக் குடங்களினுள் உள்ள நீரிலே முனைத்து விளங்குவர். அதன்பின் அந் நீரிலிட்ட மணி களிலேனும் பொன்னிலேனும் அவ் விருவரும் புகுந்து விளங்குமாறு வேண்டித்,

“தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயிலே இதுகேள்நீ

வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய ஒருத்தன்

மான்பழித் தாண்டமென்னோக்கி மணாளனை நீவரக்கூவாய்"

என்னும் மந்திரத்தை மனங்கரைந்து உரைக்க. அங்ஙனம் உரைத்த வளவானே அம்மையப்பர் இருவரும் அவ்விரண்டினும் விளங்கி நிற்பர்.

இப்போது அக் குடங்களின் நீரினும் மணியினும் முனைத்து விளங்கும் அம்மையப்பர்க்கு அகில் புகைத்துக், கருப்பூரங் காளுத்தி ஓகார வடிவாகச் சுழற்றிக் காட்டிப், பழங்கள் நெய்யடிசில் முதலியன படைத்து,

66

“எம்பிரான் போற்றி! வானத் தவரவர் ஏறு போற்றி!

கொம்பரார் மருங்குன் மங்கை கூற, வெண்ணீற போற்றி! செம்பிரான் போற்றி! தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி! உம்பரா போற்றி! என்னை ஆளுடை ஒருவ போற்றி!”

என மலர் துாவித் தொழுது,

66

வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/254&oldid=1675821" இலிருந்து மீள்விக்கப்பட்டது