❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
வடிவங்களாகிய கல் செம்பு வெள்ளி பொன் முதலிய உருக்களில் அம்மையப்பரை வருவித்து வைத்து வழிபடுதல் இன்றியமை யாததாயிற்று. இந்த ஏதுவினாலேயே, பண்டைக்காலத்தில் தீ வடிவின் வைத்து இறைவனை வழிபட்ட அம்பலங்களை யெல்லாம் பின்றைக் காலங்களில் திருக்கோயில்களாக்கி, அவற்றின் நடுவே தீப்பிழம்பின் வடிவு போல்வதாகிய கந்துருவினைச் (சிவலிங்கத்தை) நிறுத்தி வழிபடலாயினர்.
L
நுண்பொருட்டன்மையிலும்
அஃதொக்குமாயினும், நெருப்பின்கண் இயற்கையே விளங்கும் முதல்வனை மண்வடிவுகளில் வருவித்தல் யாங்ஙனங் கூடுமெனிற் கூறுதும்: ஐம்பெரும் பொருள்களில் மண் வடிவொன்றே பருப்பொருட்டன்மை மிகுதியும் உடையது. அதற்கடுத்த தீயோ நுண்டன்மையோடு இயற்கையொளியும் வாய்ந்தது. அதற்கடுத்த காலும் விசும்பும் மிக நுண்ணியவாயினுங் கட்புலனாகாதனவாகலின் அவற்றின்கண் விளங்கும் இறை வனைக் காண்டல் இயையாது. ஆகவே, அவ் விரண்டனையும் விடுத்துக், கட்புலனாகும் ஏனை முப்பொருள்களில் மிக நுண்ணிதாகிய தீயில் விளங்கும் இறைவனை, நிரம்பவும் பருப்பொருட்டன்மையுடைய மண்ணிற் சடுதியில் ய வரு வித்து அமரச்செய்தல் இயலாது. ஆதலாற், பருப்பொருட் டன்மையில் ஒருவாற்றால் மண்ணின் இயல்போடும், விளக்கத்திலும் ஒருவாற் றால் தீயின் இயல்போடும் ஒத்து நடுநிகர்த்ததாய் நிற்கும் நீரின்கண், தீயின் நிற்கும் அம்மையப்பரை வருவித்து அமரச்செய்தல் எளிதின் முடிவதாகும். அது பற்றியே இரண்டு மட்குடங்களில் நீரை நிரப்பி, நெருப்பின்கட் புலப்பட்டும் புலப்படாதும் பிரிவின்றி அருவுருவாய்க் காணப்படும் அம்மை யப்பரை அந் நீரின்கட் புகுந்து அமருமாறு வேண்டலாயிற்று. அங்ஙனம் அன்பினால் வேண்டிய அளவிலே அன்பர்க்கு எளியராம் அவ்விருவரும் நம்பொருட்டு ஒருவாற்றாற் பிரிந்து தனித்தனி யுருவுகொண்டு, வலது குடத்தின் நீரில் அப்பனும், இடதுகுடத்தின் நீரில் அம்மையுமாகப் புகுந்து அமர்ந் தருளுவர். அவ்விருவரும் ஒருவாற்றாற் பிரிந்தும் ஒருவாற்றாற் பிரியாதும் நிற்கும் இயல்பு தெரித்தற்கே அவ்விரு குடங்களும் ஒன்றையொன்று தொடுமாறு நெருக்கி வைக்கப்பட்டன. னி, அக் குடங்களுள் இடப்பட்ட சிவப்புமணி
க
இறைவன்