❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
கோடலே இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று இனிது வாழ்தற்குக் கருவியாமெனக் கடைப்பிடிக்க.
இனி, மேற்காட்டியவாறு மந்திரக் கவர்ச்சி செய்யப் புகுவோர் தாங் கொண்ட நோக்கங்களுக் கேற்ற நாட்களில் அவ்வவற்றுக்குரிய பண்டங்களோடு அதனைத் துவங்கிச் செய்தல் இன்றியமையாததாகும். அறிவையுஞ் செல்வத்தையும் பெறல் வேண்டி நோற்போர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நோற்கத் துவங்குக. தாம் வழக்கமாய் உடுக்கும் உடையின் மேல் ஒரு சிறு சிவந்த ஆடையை யுடுத்திப், பொன்னாற் செய்த சில அணிகலன்களையும் அணிந்துகொள்க. ஏனைய மலர்களோடு பொழுது வணங்கி (சூரியகாந்தி) என்னும் மலரையும், புகைத்தற்கு மஞ்சள் செஞ்சந்தனம் என்னும் இவைகளையும் பயன்படுத்துக.
குறிசொல்லுந் திறமையும் மறைபொருள் அறியும் ஆற்றலும் பெறவிழைகுவோர் திங்கட்கிழமையில் நோற்கத் துவங்குக, தாம் என்றும் உடுத்தும் உடையோடு தூவெள்ளை யான ஓர் ஆடையினையும், முத்தால் அல்லது பளிங்கு மணியால் அமைத்த ஒரு மாலையினையும் அணிந்து கொள்க. மஞ்சட்பூவும், புகைத்தற்கு வெண்சந்தனம் அம்பர் முதலியனவும் பயன்படுத்துக. கரிய நிறமுள்ள துணிகளேனும் பொருள் களேனும், வெள்ளியல்லாத பொற்கலங்களேனும் அன்றைக்கு நோற்கும் அறையில் இருத்தல் ஆகாது.
பிறர்க்குத் தீங்கு இழைக்குஞ் செயல்கள் செவ்வாய்க் கிழமையில் துவங்கப்படுவன வாகையால், அப் பொல்லாத முறைகளை இங்கே குறியாமல் விடுகின்றாம்.
உயர்ந்த கலைநூல் ஆராய்ச்சியிற் சிறந்த புலமையுஞ் செவ்வனே பேசுந் திறமும் பெற விரும்புவோர் புதன்கிழமையில் நோற்கத் துவங்குக. அன்று உடுக்கற்பாலன பச்சை நிறமுள்ள அல்லது பலநிறக் கலப்புள்ள ஆடையேயாம். அணியற்பாலன இரசமணிகளேயாம். வழிபாட்டிற்குப் பயன்படுத்தற்பாலன மகிழம்பூவும், சாம்பிராணியுமேயாம்.
சமயத்துறைகளிலும் அரசியற்றுறைகளிலுஞ் சிறப் பெய்த வேண்டுவோர் வியாழக்கிழமையில் நோற்கற்பாலார்.