❖ மறைமலையம் 4 ❖ |
'பட்டினப் பாலையாராய்ச்சியுரை”, 'திருக்குறளாராய்ச்சி’, 'குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி' முதலிய நூல்களால் மலையிலக்காக விளங்கும்.வடமொழி நான்மறை, மறைமுடிவுகள் (உபநிடதங்கள்) மிருதி நூல்கள், கற்பசூத்திரங்கள், இதிகாசங்கள், யோக நூல்கள், சிவாகமங்கள் என்னும் வடமொழிப் பெரு நூல்களையும், மேலை நாட்டு ஆங்கில மெய்ந்நூல்களையும் பிற நுண்ணூல்களையும் நுணுகியாராய்ந்து, அவற்றின் அரிய உண்மைகளைக் கேட்போர் உள்ளத்தைப் பிணிக்குந் தகைத்தாய எளிய இனிய முறையிலேயே தமிழ் நன்மக்களுக்கு விரித்து விளங்க அறிவுறுத்தும் இவரது தனிப்பெருந் திறமை, இவர் நடத்திவரும் ‘அறிவுக்கடல்’ என்னும் பத்திரிகையிற் போந்த பல கட்டுரைகளிலும் சிறப்புற்று விளங்குகிறது. இவரது வரலாற்றாராய்ச்சி வன்மை, “வேளாளர் யாவர்”, “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்" என்னும் நூல்களில் வெள்ளிடை விலங்கலாகத் திகழ்கின்றது.
வி
தமிழ்ப் புலவர்களுள் மேலை நாட்டாராய்ச்சி முறை யினையும், மேலை நாட்டு உயரிய கருத்துகளையும் தமிழ் மக்களுக்கு எடுத்து விளக்கிப் பெரும்பயன் விளைப்பதில் முதன்முதல் முயன்றவரும், அம் முயற்சியில் தனி மேம்பாடுற்ற வரும் இவரே. நூல்களுக்கு அகலவுரை காணும் இவராற்றல் வரது, 'திருவாசக 'திருவாசக விரிவுரை'யால் நன்கு போதரும். நாவலெழுதல் முறை இத்தகையதென்று நம்மவர்க்கு நன்கு அறிவுறுத்தும் இவர் நூல்கள் 'கோகிலாம்பாள் கடிதங்கள்', ‘நாகநாட்டரசி' என்பன. பண்டைச் செந்தமிழ்ச்சுவை ததும்பும் செய்யுளியற்ற வல்ல இவரது திறமை, 'திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை’, 'சோமசுந்தரக்காஞ்சி’ என்னும் சிறுகாப்பியங்களால் இனிது விளங்கும். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் உள்ள சிறந்த நூல்களை மூல நூல்களின் சொற்பொருளாற்றல் குறைவுபடா வண்ணம் தெள்ளிய செந்தமிழ் நடையில் மொழிபெயர்க்கும் சீர்மை, முறையே இவரியற்றிய 'சிந்தனைக் கட்டுரைகள்’, 'சாகுந்தல நாடகம்’ என்னும் நூல்களால் இனிது விளங்கும். சித்தாந்த மகாசமாசத் தினை நிறுவிச் சிலவாண்டுகளாக அதனைச் சிறப்புற நடத்தியவர் இவரே. 1940இல், இவர் சென்னையில் நிகழ்ந்த தமிழர் சமய