❖ மறைமலையம் 4 ❖ |
துண்டு.இதனால் அவரை அணுகி அழைப்பதற்குத் தமிழன்பர்கள் தயங்கினார்கள் என்பது பலரும் அறிந்ததே.
மேதைகள், மகான்கள், புலவர்கள் பெரியவர்களிடம் தனி இயல்புகள் சில இருக்கத்தான் இருக்கும். இவற்றினாலெல்லாம் அடிகளின் மகத்தான தமிழ்த்தொண்டு எள்ளளவும் குறைந்து விட்டதாகச் சொல்ல முடியாது.
தமிழும், தமிழகமும், சைவ சமயமும் உள்ள வரையில் மறைமலையடிகளின் அரிய தொண்டின் பெருமை குன்றிலிட்ட விளக்காக என்றென்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆர். கிருஷ்ணமூர்த்தி 'கல்கி' ஆசிரியர்
(பக். 30-34)
நிலைத்து நிற்கும் பணியைச் செய்தவர்
தமிழர்தம் வாழ்வும் வளமும் சிறக்கவும், தமிழின் தனித்தன்மை ஒளிவிடவும் பாடுபட்டு அயராது உழைத்த அடிகளார் நினைவு என்றென்றும் தமிழ் மக்கள் உளத்தில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
சாதி வேறுபாடற்ற தமிழ்ச்சமுதாயம் காணப் பாடுபட்டு, ஒன்றே குலமும் ஒருவரே தேவனும் என்ற நெறியில் தமிழை ஆற்றுப்படுத்திய அடிகளாரின் புகழ் என்றென்றும் வையத்து வாழும் என்பது உறுதி.
- அ. மு. பரமசிவானந்தம்
மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர்