❖ சான்றோர்கள் பார்வையில் - அடிகளார் ❖ |
சான்றோர்கள் பார்வையில் - அடிகளார்
திடீரென்று ஒருவருக்கு ஒரு பழைய நூல் வேண்டுமானால் கிடைப்பதில்லை. பல அரிய தமிழ் இலக்கிய இலக்கணங்கள் இரண்டாம் முறை பதிப்பாகாமலே மறைந்துவிட்டன.
ஆகவே, மறைமலையடிகளுடைய நூல் நிலையத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இன்னும் வேண்டிய நூல்களைத் தொகுத்து அடிகளுடைய பெயராலேயே ஒருசிறந்த நூல் நிலையத்தை அமைக்கலாம். அது மறைமலையடிகளின் நினைவை நிறுத்த உதவுவதோடன்றித் தமிழ் அறிஞர்களுக்கும் பேருபகாரமாக இருக்கும்.
- திரு. கி. வா. சகநாதன் “கலைமகள்" ஆசிரியர்
(பக்.. 34 - 36)
த தமிழர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்தவர்
தமிழ் ஈடும் எடுப்புமற்று வளரவேண்டும், தமிழர் வலிவெலாம் பெற்றுப் புகழோடு திகழவேண்டும், தமிழ்நாடு வளமெலாம் பெற்றுச் செழித்தோங்கி உயர வேண்டும் என்பதற்கான ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குத் தந்தவர் அடிகளார் ஆவர்.
அடிகளாரின் இலக்கியப் படைப்புகள் அனைத்தும் தமிழகத்தின் அழியாப் பெருஞ்செல்வங்கள் ஆகும். தமிழகம் அடிகளாருக்கு நன்றி காட்ட மறந்துவிட வில்லை என்பதன் அறிகுறியாகத்தான் அவர் பெயரில் நினைவு அடையாளங்கள் பலப்பல வகைகளில் அமைக்கப்பெற்றிருக்கின்றன.
நாவலர் நெடுஞ்செழியன்
மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர்