பக்கம்:மறைமலையம் 4.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ சான்றோர்கள் பார்வையில் - அடிகளார் ❖
265

சான்றோர்கள் பார்வையில் அடிகளார்


மறை மறைந்ததே

நோய்வாய்ப்பட்டு

வருந்திக்

றைமலையடிகளார் காண்டிருந்த போது செய்தியறிந்து கச்சியம்பதியிலிருந்து போந்து அடிகளாரில்லமடைந்தேன். அங்கு யான் கண்ட காட்சி, என்னைத் திடுக்கிடச் செய்தது! யாக்கையின் நிலையாமையை நினைந்து நெஞ்சு நெக்குருகி, அடிகளாரை நோக்கினேன். கவலை தோய்ந்த கருத்துடன் அடிகளார் பார்வை என் மீது திரும்பியது. அடிகளார் - எப்பொழுதும் என்னுடன் நெடுநேரம் மலர்முகத் துடன் அளவளாவும் அன்பினர் பேச இயலாது சோர்ந்த முகத்துடன் தோற்றமளித்தார். அந்தோ! அப்பேசாப் பேச்சிற் பிறங்கிய பொருளை வருந்திய என் மனம் வாழ்நாள் இறுதி வரையில் மறவாது!

-

“மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வது எப்படி?” என்னும் சீரிய நூலைச் செந்தமிழால் இயற்றித் தமிழ் நாட்டிற்களித்த தனிப் பெருந் தமிழர் - உடலோம்புதலிற் கண்ணுங் கருத்துமாயிருந்த ஒழுகலாறு உணர்ந்த உத்தமர் - எழுபத்தைந்தாவதாண்டின் எல்லையைக் கடவாமுன்னரே வாழ்வைத் துறந்து வானெய்தின ரென்றால், ஊழின் பெருவலியை என்னென்றியம்புவது! 'வினைப்பயனை வெல்ல வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்துமில்லை', என்பது எத்துணை உண்மை விளக்கும் உரையாய் விளங்குகிறது!

அடிகளார் வாழ்ந்தது முக்கால் நூற்றாண்டேயாயினும், அவரால் தமிழ்நாடு அடைந்த பயன் அளப்பரிது எனக் கூறுதல் மிகையாகாது. அடிகளார் வரன்முறை வழாது மும்மொழிப் புலமை பெற்ற முதுபெரும் புலவர்; சைவ சித்தாந்தத்தின் திட்பநுட்பங்களை நன்கு பயின்று மேனாட்டறிஞரும் மெச்சும் வகையில் ‘Mystic Mina' என்னும் ஆங்கில வெளியீட்டின் மூலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/298&oldid=1675875" இலிருந்து மீள்விக்கப்பட்டது