பக்கம்:மறைமலையம் 4.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
270

❖ மறைமலையம் 4 ❖

வேறுபாடின்றி மக்கள் அனைவருமாக நாம் கொண்டாடும் விழாக்களோ பெரிதும் மூடநம்பிக்கை நிரம்பிய முரட்டுவிழாக் களாகவே உள்ளன. எஃது எவ்வாறாயினும் இந்தியாவில் எந்த இனமும் தன் இன இழிவுகளையும் அதன் வகையில் பிறிதோர் இனத்திற்குச் செய்யும் இனக்கேடுகளையும் இன்றுவரை மாற்றிக்கொள்ளவே இல்லை. இவ்விந்தியநாடு தன்னுரிமை பெற்று இரு பத்தேழாண்டுகள் ஆகியும் நாம் துணிமணிகளைத் துவைத்துக் கட்டத் தெரிந்திருக்கின்றோமே யன்றி, நம் மனங்களைத் துவைத்து வைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம். ஆகையால்தான் நாம் கொண்டாடும் விழாக்களில் நமக்கு மகிழ்ச்சி யிருப்பதில்லை; அவற்றின் படையல்களில் நாம் சுவை காணமுடிவதில்லை.

அவ்வகையில், அடிகளாரின் விழாவும் ஒரு சார்பு விழாதான்! அடிகளார் தமிழைப் பேசியதைவிட, சைவ சமயத்தைப் பேசியதே மிகுதியாக இருக்கும். ஆனாலும் சைவர்கள் தம் சமய அடிப்படையில் அவர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவார்கள் என்று சொல்ல முடியாது. அப்படிக் கொண்டாடுமாறு அவரால் சைவத்துக்கு எந்தத் தனிப்பட்ட ஊதியமும் இருப்பதாக அவர்கள் சொல்லிக் கொள்ளுவதில்லை. வேண்டுமானால், இழப்பு இருக்கலாம். எனவே, அடிகளாரைத் தமிழ் என்னும் அடிப்படையில் தான் நினைவு கூர்கின்றனரே யன்றிச் சமயம் என்னும் அடிப்படையில் நினைவு கூர்வார்கள் என்று எண்ணுவதில்லை. ஆகவே, மறைமலையடிகளார் தனித் தமிழியக்கத்தார் மட்டுமே பெரிதும் கொண்டாடுவதற்குரிய ஒரு தனிப்பெருந் தலைவராக விளங்கு கிறார் என்று கொள்ளவேண்டி உள்ளது. இதே கரணியத்துக் காகவே ஆரியப் பார்ப்பனரும், அவரை அடிப்பற்றி விளங்கும் தமிழடிமைகளும், அடிகளாரை வெறுத்தும் பழித்தும் வருவதை நாம் உணரலாம். எனவே, மறைமலையடிகள் நூற்றாண்டு விழா என்பது தனித் தமிழியக்கத்தின் ஒரு தனிப்பெரும் விழாவாகும். உண்மையாகச் சொன்னால் இது தமிழினமே போற்றிக் கொண்டாட வேண்டிய ஒரு தனி விழாவாகும்!

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/303&oldid=1675526" இலிருந்து மீள்விக்கப்பட்டது