பக்கம்:மறைமலையம் 4.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ சான்றோர்கள் பார்வையில் - அடிகளார் ❖
281

6.

7.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு

கடிதோச்சி மெல்ல எறிக, நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்

8. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

9. ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை

10. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய வெல்லாம் பிற

11. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

12. ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்.

13. இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்.


இங்ஙனம் எத்தனையோ பல திருக்குறள் உண்மைகளுக் கேற்ப அடிகளார் தம் செயல்களை உலகியற்கைக் கண் கொண்டு நோக்கிச் செய்து நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இவற்றுள் முதற்குறள் குறிப்பறிதலைக் கூறியது; இரண்டும் மூன்றும் நான்கும் அறிவு நுட்பம் விளக்கின; ஐந்தும், ஆறும், ஏழும் எட்டும் செயல் முறை தேற்றின; ஒன்பது அறத்தின் அடிப்படை நவின்றது; பத்து மனத்திட்பமும், பதினொன்று பன்னிரண்டு ஊக்கமுடைமையும், பதின்மூன்று இடரில் தளராமையுமாகப் பல செய்முறைகளையும், தெளிவிக்கும்; இவ்வெல்லா வகையிலும் அடிகள் செயல்வீரரே என்பது அனைவரும் அறிந்ததே.

இரண்டோ ரெடுத்துக்காட்டுகள்

1. சென்னைப் பல்கலைக் கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், பிற கல்லூரிகளிலும் அலுவலுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/314&oldid=1675885" இலிருந்து மீள்விக்கப்பட்டது