பக்கம்:மறைமலையம் 4.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
294

❖ மறைமலையம் 4 ❖

மறைமலையடிகளின் தனித்தமிழ்த்

தொண்டும் எழுத்தாளர் கடமையும்

தமிமொழியில் இலக்கியம் படைக்கும் எழுத்துப் பெருமக்கள் தமிழ் ஒரு மொழி, அதற்கும் ஏனைய மொழிகட்குப் போல் ஒரு வரம்பு உண்டு என்றுணர்ந்து அந் நல்வரம்புக்கு உட்பட்டு எழுத வேண்டும். என்று பிறந்தவள் என்று உணரகில்லாத் தமிழுக்கு ஓர் ஆற்றலுண்டு. அந்த ஆற்றலை எழுத்தாளர்கள் பெற வேண்டும்; அதனை மெலிக்காது மேன்மேலும் காலந்தோறும் வலுவாக்க வேண்டும்.

தன்னேரில்லாத் தமிழ் தனித்தியங்கும் இயற்கையது என்பதனைத் தொல்காப்பியம் முதலான அவைய நூல்களும் பின்னர்த் தோன்றிய பெருங் காப்பியங்களும் எண்பிக்கின்றன. தமிழ் குமரி மொழி என்று போற்றப்படினும் அஃது ஒரு முதுமொழி; அதனை அது வளர்ந்து வந்த இயற்கைப்படி வளர்க்க வேண்டும். ஐம்பது அகவை கொண்ட ஒரு முதியவர்க்கு மாற்ற வாரா, மாற்றிக் கொள்ள இயலாச் சில வாழ்க்கை மரபுகள் ருப்பதுமான, தமிழுக்கும் பல வரம்புத்தடங்கள் ஏற்பட்டு ட்டன. அத் தடங்கள் அடிப்படையிற்றான் அதனைத் தழைப்பிக்க வேண்டும்.

தனித்தியங்கும் வன்மையினால் ஒரு மொழி பெருமை யுடையது என்றோ, அயன்மொழிச் சொற்களின் கலப்பினால் ஒரு மொழி சிறுமைத்து என்றோ புகழ் பழி கூறுவது வேண்டாத தொன்று. இம் மொழி தனித்து நடக்கும் இயற்கை சான்றது. அம் மொழி கலந்து செழிக்கும் இயற்கை வாய்ந்தது என இருபா லினையும் அவ்வம்மொழியியற்கையாகவே கருத வேண்டும்; கருதி அவ் வண்ணம் வளர்க்க வேண்டும். தமிழ் ஞாலத் தொன்மொழி யாதலானும் பல மொழிகள் ஞாலத்திடைத் தோன்றுவதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/327&oldid=1675538" இலிருந்து மீள்விக்கப்பட்டது