பக்கம்:மறைமலையம் 4.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
300

❖ மறைமலையம் 4 ❖

❖ 4

வந்தமையின், தமிழுக்கு இருந்த கல்வியிடங்களும் சொல்வழக்குக் களும் குறைந்து ஒழிந்தமையின், இவ்வியக்கம் உயிர்ப்பும் உரமும் பெற்றது. இக் கலப்புச் செய்தவர் ஓரினத்தார் அல்லர். தமிழகத்தில் எல்லா இனத்தாரும் கலப்பே பெருமை என்று சூதாடிகள் போல வாய்க்கும் எழுத்துக்கும் வந்தவற்றை யெல்லாம் தமிழ் என்ற மொழியின் பேரால் சுமத்தலாயினர். தமிழின் உருவத்திற்கேற்பக் கூடத் திரித்துப் பிற சொற்களை வழங்காமல், வேற்றொலியும் வேற்றெழுத்தும்படக் கிடந்தாங்கு வழங்க லாயினர். ‘வடசொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தமிழுக்குப் பொருந்தாத் திரிபுபடுத்தாமல், இனிய மெல்லிய தமிழ்ச் சொற்களின் இடையே அவற்றை அங்ஙனமே எழுதினால் அவை தமிழின் இனிமையிலும் அருமையிலும் பழகினார்க்கு எவ்வளவு அருவருப்பாய்த் தோன்றுகின்றன' என்று அடிகளார் பெருங் கவல்வுறுவதைப் பார்க்கின்றோம்.

மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறை போகாதும் காத்தது. தமிழின் ‘வயிற்றிலிருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாட நூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒரு சார் இளைஞர் கூட்டம் எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூயநீராகக் காத்தல்போலத் தமிழைத் தூய தமிழாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் பல செய்தித் தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. சொற்பொழிவுகள் நல்ல தமிழில் கேட்கப்படுகின்றன. வாழ்த் துக்கள் வரவேற்புக்கள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந் நன் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள் அத் தவமகன் அடிச்சுவட்டை அன்புச் சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மைபோலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் இளைய மறைமலை யடிகள் இன்று பல்கிவருப. ஆதலின் தமிழ், தனித்தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன்சொற்களை க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/333&oldid=1675541" இலிருந்து மீள்விக்கப்பட்டது