பக்கம்:மறைமலையம் 7.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

93

னி, அரசன் துஷியந்தனுக்குத் தோழனான விதூ ஷகனைப்பற்றிச் சிறிது கூறுவாம். இவன் அரசனுக்கு ஆறுதல் புகல்பவனாய் இந்நாடகக் கதை நிகழ்ச்சியில் முன்னும் பின்னுஞ் சிறிது தொடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனனே யன்றி, இக்கதைச் செலவுக்கு இன்றியமையாத ஓர் உறுப்பாக

வன் இதன்கட் பிணைக்கப்பட்டிலன், இந்திரனால்

விடுவிக்கப்பட்ட அவன் தேர்ப்பாகனான மாதலி தனது வருகையை அறிவித்தற் பொருட்டு இவனைக் கட்புலனாகாமல் நின்று வருத்தும் இடம் (127), இதன் கதை நிகழ்ச்சிக்கு ஒரு தொடர்புடையதுபோற் காணப்படினும், மாதலி அவனை வருத்தாமலே அரசனெதிர் வருதலும் இயன்று, அது தொடர்ந்து செல்லுதல் கூடுமாகலின், ஆண்டும் விதூஷகன்றொடர்பு இன்றியமையாததாயில்லை. ஆகவே, உலாவிச்செல்லும் வலியனான ஒரு கட்டிளைஞன் விளையாட்டாக ஒரு கோல் கைக்கொண்டு செல்வதல்லது அதனைத் தனக்கோர் ஊன்று கோலாகக் கொள்ளாமைபோல, இந்நாடகக் கதை நிகழ்ச்சியும் இவனை ஒரு விளையாட்டுக் கருவியாக டையிடையே ஈர்த்துச் சல்வதன்றிப்

பிறிதிலாமை காண்க.

ஆசிரியர் காளிதாசர் தாம் முதன்முதல் இயற்றிய 'மாளவிகாக்நிமித்திரம்' என்னும் இனிய நாடக நூலின் கதை நிகழ்ச்சிக்கு விதூஷகனை இன்றியமையாத ஓர் உறுப்பாகப் பிணைத்துவிட்டமை போல, அவர் தாம் கடைமுறையாக இயற்றிய இச் சாகுந்தல நாடகக் கதை நிகழ்ச்சியில் விதூஷ கனைப் பிணைத்துவிடாத செயல் என்னையென்று ஆராய்ந்து நோக்குங்கால், உயர்ந்த இயற்கையுடையனல்லாத ஒருவனை, விழுமிய காதலன்பே கருக்கொண்டு செல்லுஞ் சாகுந்தல நாடகக் கதை நிகழ்ச்சியிற் பெரிதுந் தொடர்பு படுத்துதல் வனப்புடைத்தாகாமை கண்டாரென்பது புலனாகின்றது.

L

அல்லாமலும், மாளவிகாக்நிமித்திரத்தில் ஓர் இன்றியமை யாத உறுப்பாகப் பிணைக்கப்பட்டிருக்கும் விதூஷகனுக்கும், இச்சாகுந்தலத்தில் ஒரு விளையாட்டுக் கருவியாகப் பிணைக்கப் பட்டிருக்கும் விதூஷகனுக்கும் வேறுபாடு பெரிதாகக் காணப்படுகின்றது. முன்னையதிற் போதரும் விதூஷகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/118&oldid=1578247" இலிருந்து மீள்விக்கப்பட்டது