இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
118
பெறுது மெனின்,
மறைமலையம் - 7
“மாலைக் காலத்து மங்கொளி மருங்கிற் புயலரண் போலப் பொருந்தித் தெளிபொன் உருக விட்டாலென மருவித் தோன்றிக் குணகடல் குடகடல் கழூஉவக் கிடக்கும்
வளஞ்சா லிம்மலை யாதோ வுரைமோ!”
(132)
என்று அரசன் ஏமகூடமலையின் மாலைக் காலத் தோற்றத்தைக் கண்டு வினவுதலாற் பெறுது மென்பது. பின்னர் அவன் அம் மலைக்கட் சென்று தன் மகனையும் மனைவியையுந் தலைக்கூடி, அவருடன் சென்று காசியப முனிவரையும் அவர்தம் மனைவி யாரையும் வழிபட்டுத் தன் நகர்க்குத் திரும்பிய காலம் அம் மாலைக் காலத் திறுதியா யிருக்கலாமென்று உய்த்துணர்தல் வேண்டும். எனவே, இச்சாகுந்தல நாடகக் கதை நிகழ்ச்சி துவங்கி முடிந்த காலப் பரப்பு ஐந்தரை அல்லது ஆறு ஆண்டு ஆகல் வேண்டுமென்பது அறிந்துகொள்ளப்படு மென்க.