பக்கம்:மறைமலையம் 7.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

125

பட்டமையால் அவர்க்கு ஒரு நூறாண்டு முற்பட்டிருந்த வராகக் காணப்படுங் காளிதாசர் வராகமிகிர ரோடு ஒருகாலத்து ஒருங்கிருந்தாரெனல் பொருந்தாதெனவும் வடநூலாராய்ச்சி யில் மிக வல்லுநரான ஆங்கில ஆசிரியர் ஒருவர் கூறுகின்றார்.3

3

ஆனாற், புத்தகயாவிற் காணப்பட்ட கல்வெட்டு ஒன்று கி.பி.948ஆம் ஆண்டிற் செதுக்கப்பட்டதொன்றாகலான், அது 'விக்கிரமாதித்தியன் உலகிற் புகழோங்கிய வேந்தனேயாவன்; ஆதலினாற்றான், அவனது அவைக்களத்தே ஒன்பது சிறந்த புலவர்கள் நவரத்நங்கள் எனும் பெயர்பூண்டு விளங்கலாயினர்.’' எனக் கூறுதல் கொண்டு, காளிதாசரும் அவருடன் ஒருங்குவைத் தோதப்பட்ட புலவர்களும் அவ்விக்கிரமாதித்திய வேந்தனது அவைக் களத்தே யிருந்தது வாய்மையேயாகல் வேண்டுமென 'உரோமேச சந்திரதத்தர்' உரை நிறுவினார்."

994

இவ்விரு வேறு கோட்பாடுகளும் ஒன்றோடொன்று பெரிது முரணுதலால் இவ்விரண்டனுள் எது பொருந்துவ தென்பது ஆராயற்பாற்று. ஆசிரியர் காளிதாசர் இயற்றிய நாடகக் காப்பியங்கள் மூன்றனுள் ‘விக்ரமோர்வசீயம்' என்பது விக்கிரமாதித்தன் பெயர் முதன்மொழியைத் தன் பெயரின்

முதற்கட் கொண்டிருத்தலால், தம்மைப் பாதுகாத்த

வேந்தனான விக்கிரமாதித்தனது நன்றியை நினைவுகூர்தற்கு ஒரு குறியாகவே அவர் அப்பெயரை யமைத்து அதனை யியற்றினாராதல் நன்கறியப்படும். தம்மைவைத்துப் புரந்த காவலர் செல்வர்களின் பெயர்களை, அவர் செய்த நன்றிக் கறிகுறியாகத் தாம் இயற்றும் நூல்கட்குப் பெயராக அமைத்தலும், அல்லது அந்நூல்களின் டையிடையே பெய்துரைத்தலும் நல்லிசைப் புலவர்கள்பாற் பண்டுதொட்ட வழக்கமாய்ப் போதருகின்றன. இது 'சேந்தன்திவாகரம்', 'திருத்தொண்டர் புராணம்' முதலிய தமிழ் நூல்களிலும் வைத்து நன்கறியப்படும். படவே, காளிதாசர் தாம் விக்கிரம வேந்தனாற் பாதுகாக்கப்பட்ட நன்றியை நினைந்தே ‘விக்ரமோர்வசீயம்' என அவனது பெயர்சூட்டி அந்நாடக நூல் யாத்தமையும், அதனால் அவர் விக்கிரமாதித்தன் அவைக்களத் திருந்தமையும் உய்த்தறியப்படும். மேலும், அவ்விக்கிரமாதித்த வேந்தன் செங்கோல் ஓச்சிய தலைநகரான உச்சயினியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/150&oldid=1578279" இலிருந்து மீள்விக்கப்பட்டது