பக்கம்:மறைமலையம் 7.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் - 7

அவன் மழையினை வருவிக்குந் தேவனாகவும் வடநூல்கள் நுவலுமாறே, இஞ்ஞான்றும் அந்நாட்டில் ஐராவதம் எனப் பெயரிய யாறு ஓடா நிற்கின்றது, வெள்ளை யானையும் அதன்கண் உளது. மழை வருவிக்குந் திருநாளும் அதன்கட் காண்ட ாடப்பட்டு வருகின்றது. மழை அடுத்தடுத்து மிகுதியாகப் பெய்து வருதலால் இந்நாட்டின் அரசன் மழைக்கடவுள் எனக் கூறப்பட்டதூஉம் பொருத்தமாகவே க்கின்றது. இதன்கண் நெற்பயிரின் விளைவு நனிமிகுந் திருத்தலால் இந்நாட்டவர்க்குள் வறுமையே யில்லை அதுவேயுமன்றிப், பொன்னும் விலையுயர்ந்த பல்வகை மணிகளும் இதன்கண் நிரம்பியிருத்தலால் இது பொன்னா டெனப் பெயர்பெறலானதும் வாய்வதேயாம்.

இப்பெற்றிருத்தான வளவிய கடாரதேயத்து விளை பொருள்களையும் பொன்னையும் மணிகளையுங் கவர்ந்து கோடற்பொருட்டு அந்நாட்டையடுத்துள்ள பெரிய பெரிய மலைத்தொடர்களிலுங் காடுகளிலும் உறைவாரான வேட்டுவர் களும் பிறரும் அதன்கட்புகுந்து அந்நாட்டவர்க்கும் அவர்தம் அரசற்கும் இடர் விளைத்துவருவதல் இயல்பேயாம். அதனால் அவ்வரசன் பிறநாட்டு வலிய ஓர் அரசனது உதவியை நாடுதலும் இயல்பேயாம். ஆகவே, இந்திரன் எனப் பெயரிய கடாரநாட்டு மன்னன் தனக்குந் தன் நாட்டுக்கும் இடர் பெரிது விளைக்கும மலையர் காடவரின் குறும்பைத் தொலைப்பான் வேண்டித், தனக்கு நண்பனான ஆற்றலிற் சிறந்த துஷியந்த மன்னனையும் அவன்றன் படைஞரையுந் தன் நாட்டிற்கு வருவித்திருக்கலாம். அங்ஙனம் வருவிக்கப்பட்டு அக்கடார மன்னற்கு வேண்டும் உதவியாற்றித் துஷியந்தன் திரும்புங் காலையில், வழியிடையே ஒரு மலைமீ திருந்த ஒரு முனிவரது பாழியைக் கண்டு, ஆண்டுச்சென்று அம்முனிவரை வணங்கப் புக்கவன் தன் மகனையும் மனைவி சகுந்தலையையும் அதன் கட் டலைப் பட்டானாகல் வேண்டும், என்றிங்ஙனங் கொணர்ந்து பொருத்துவதே மெய்ந்நெறி வழுவாச் சான்றோர் தம் புலனெறி வழக்கிற்குப் பொருந்துவதாமென்று கடைப் பிடிக்க.

L

ன்னுந், துஷியந்தன் வானவூர்தி இவர்ந்து இந்திரன் நாடு சென்றானென்பது பொய்ந்நிகழ்ச்சியின்பாற் படுவதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/183&oldid=1578312" இலிருந்து மீள்விக்கப்பட்டது